world

img

தீக்கதிர் உலக செய்திகள்

சிரிய ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்

சிரியாவின் தெற்கு பகுதியில் உள்ள ராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்கு தல் நடத்தியுள்ளது. சிரியாவின் மனித உரிமைகள் கண்காணிப்பு நிறுவனத்தின் தகவலின்படி, குனைத்திரா நகரம் மற்றும் தாரா பகுதிகளில் இஸ்ரேல் போர் விமானங்கள் இரவு முழுவதும் குண்டு வீசியுள்ளன.   இந்த தாக்குதல்கள் சிரியா வின்  175 ஆவது ரெஜிமெண்ட் ராணுவதளம் மற்றும் பிற முக்கியமான ராணுவ இடங்களைத் தாக்கிய தாக  தெரிவித்துள்ளனர். சிரியாவில் ஆட்சிக் கவிழ்ப்பு நடந்த பிறகும் அங்குள்ள ராணுவ கட்ட மைப்புகளை திட்டமிட்டு இஸ்ரேல் அழிக்கிறது.

இரண்டு மாதத்தில் 2 லட்சம்  ஆப்கானியர்கள் வெளியேற்றம்

பாகிஸ்தானில் இருந்து கடந்த இரு மாதங்களில் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான ஆப்கன் மக்களை வெளியேற்றி யுள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதம் 1,35,000, மே மாதம் 67,000, ஜூன் முதல் இரண்டு நாட்களில் 3,000 ஆப்கன் மக்களை வெளியேற்றியுள்ளது. ஆப்கானிஸ்தானின் உள் நாட்டுப் போரின் போதும், தலிபான் அரசிடம் ஆட்சி ஒப்படைக்கப்பட்ட பிறகும் லட்சக்கணக் கான ஆப்கன் மக்கள் பாகிஸ்தான் மற்றும் ஈரானில் தஞ்சம் புகுந்தது குறிப்பிடத்தக்கது. 

டிரம்ப்பின் மசோதா  “அருவருப்பான மசோதா”: மஸ்க் 

டிரம்ப் நிறைவேற்றத் துடிக்கும்  வரி மற்றும் செலவாண்மை மசோதா “அருவருப்பான மசோதா” என எலான் மஸ்க் மீண்டும் கடுமையாக விமர்சித்துள்ளார். குடியரசுக் கட்சி உறுப்பின ர்களை ஏற்கும்படி ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அழுத்தம் கொடுப்பதாகவும், இந்த மசோதா அரசின் பற்றாக்குறையை அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மசோதா ஏற் கெனவே பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப் பட்டுள்ளது. இம்மசோதா அரசு செலவினங்களை வெட்டும் அரசு திறமைத் துறையின் பணிக்கு எதி ராக உள்ளது என்றே அவர் அத்துறை பணியை நீட்டிக்காமல் பதவி விலகியதாகக் கூறப்பட்டுள்ளது. 

நீதிபதி மீது தடை  ஏற்க முடியாதது : லூலா 

பிரேசில் உச்சநீதிமன்ற நீதிபதி அலெக்சாண்டர் டி மொராய்ஸ் மீது அமெரிக்கா விதித்த தடையை “ஏற்க முடியாதது”  என்று அந்நாட்டு ஜனாதிபதி லூலா கண்டித்துள் ளார்.  “ஒரு நாட்டின் ஜனாதிபதி, மற்றொரு நாட்டின் உச்சநீதிமன்றத்தின் முடிவுகள் குறித்து கருத்து கூறுவது ஏற்க முடியாதது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  2024 இல் பிரேசில் சட்டத்திற்குட்பட்டு இயங்கத் தவறியதற்காக ட்விட்டர் (எக்ஸ்) சமூக தளத்தை தற்காலிகமாக தடைசெய்ததால்  அவர் இத்தடையை எதிர்கொள்வதாகக் கூறப்பட்டுள்ளது. 

எங்கள் நாட்டில் தலையிட  அமெரிக்கா யார்? : கோமேனி

“ஈரானின் அணு திட்டத்தை அமெரிக்கா வால் ஒன்றும் செய்ய முடியாது” என ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா கோமேனி தெரிவித்துள்ளார். முதலில் ‘எங்களுக்கு அணு செறிவூட்டல் தேவையா இல்லையா என்று சொல்ல அமெரிக்காவுக்கு என்ன அதி காரம்?  அவர்களே அணு குண்டுகளை வைத்தி ருக்கிறார்கள். இது ஒரு நாட்டில் எண்ணெய் இருந்தும், எரிபொருள் தயாரிக்க முடியாதது போன்றது. எல்லாவற்றிற்கும் அமெரிக்கா வையே நம்பியிருக்க வேண்டும் என்பதே அவர் களின் நோக்கம் என அவர் விமர்சித்துள்ளார். 

வடகொரியாவுடன் அமைதி; அமெரிக்காவுடன் பொருளாதார உறவு: புதிய தென்கொரிய ஜனாதிபதி பேச்சு

சியோல், ஜூன் 4 - தென்கொரிய ஜனாதிபதி தேர்தலில் கொரிய ஜனநாயகக் கட்சி (எதிர்க்கட்சி) வேட்பாளர் லீ ஜே-மியங் வெற்றி பெற்று ஜனாதிபதியாக பதவி ஏற்றுக் கொண்டார். இவர் சிறுவயதில் குழந்தை தொழிலாளியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.  நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கொண்டிருந்த எதிர்க்கட்சிக்கு அஞ்சி அந்நாட்டின் முன்னால் ஜனாதிபதி யூன் சுக் யோல் கடந்த ஆண்டு ராணுவச் சட்டத்தை அமல்படுத்தினார். ஆனால் எதிர்க்கட்சி எம்பிக்கள் உடனடியாக ராணுவ சட்டத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் தீர்மானத்தை கொண்டு வந்து ராணுவச் சட்டத்தை முறியடித்தனர். இதன் பிறகு அரசியல் மாற்றங்கள், போராட்டங்கள், யூன் சுக் யோல்க்கு எதிராக வழக்கு, அவரது கைது என அந்நாட்டின் அரசியல் பரபரப்பானது.  இந்நிலையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் லீ ஜே-மியங் 49 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்று ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார். தென் கொரியாவில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியாளர் பெரும்பான்மை வாக்குகளை பெற்றிருந்தாலே போதுமானது. 50 சதவீத வாக்குகளை பெற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பதவி ஏற்ற பின் பேசிய இவர், சரிந்துவரும் தென் கொரியாவின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும், தீபகற்பத்தில் அமைதியை நிலை நாட்டவும், வட கொரியாவுடனான பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு தயாராக இருப்பதாகவும் அமெரிக்கா ஜப்பானுடனான பொருளாதார உறவுகளை மேம்படுத்தவும் அவர் உறுதி கொடுத்துள்ளார். இதற்காக “எவ்வளவு விலை உயர்ந்ததாக இருந்தாலும், போரை விட அமைதியே சிறந்தது” என்றும் அவர் குறிப்பிட்டார். தென்கொரியாவில் நடைபெற்ற இத்தேர்தல் நியாயமானதாக நேர்மையாக நடத்துள்ளது என கருத்து தெரிவித்துள்ள அமெரிக்கா, சீனாவுடனான தென்கொரியாவின் பொருளாதார உறவுகள் மேலும் அதிகரிக்கும் என கவலை கொண்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகின்றன.  பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் யோலின் ஆட்சியில் சீனாவுடனான தென் கொரியாவின் பொருளாதார உறவுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர் அமெரிக்காவுடன் நெருங்கிய உறவுகளையும் வடகொரியாவுடன் அதிக மோதல் போக்கையும் கொண்டிருந்தார்.  ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஜே-மியங் தென் கொரியாவின் இறையாண்மையை பாதுகாத்து அந்நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் திட்டங்களை முன் வைத்து வருவதுடன் வடகொரியா வுடன் அமைதியை நிலை நாட்ட முயற்சித்து வருவதால்  இவரை மைய இடதுசாரி என மேற்குலக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.