world

img

டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு

வாஷிங்டன், ஜூலை 14- அமெரிக்க முன்னாள் ஜனாதி பதி டிரம்ப் மீது தேர்தல் பிரச்சா ரத்தின் போது துப்பாக்கிச் சூடு  நடத்தப்பட்டுள்ளது. இந்த துப் பாக்கி சூட்டில் காதில் உரசிய துப்  பாக்கி கொண்டால்   சிறு காயத்து டன் நூலிழையில் உயிர் தப்பி யுள்ளார்.

நவம்பர் 5 அன்று அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முன்னாள் ஜனா திபதியும் குடியரசுக் கட்சி வேட்பாள ருமான டொனால்ட் டிரம்ப் தீவிர  தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள் ளார்.

இந்நிலையில், டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் பென்சில் வேனியா மாகாணத்தில் ஆதரவா ளர்கள் மத்தியில் தேர்தல் பரப்புரை யில் ஈடுபட்டிருந்த போது  திடீ ரென அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. 

இந்த தாக்குதலில் டிரம்ப் இன்  வலது காதின் மேல் துப்பாக்கியின்  குண்டுகள் உரசிச்சென்றது உடனடி யாக தனது காதை பிடித்துக் கொண்டு டிரம்ப் கீழே அமர்ந்து விட்டார். அவரது பாதுகாப்பு படை வீரர்கள் உடனடியாக ஓடி வந்து டிரம்ப்பை சூழ்ந்து பாதுகாப்பாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு  சென்றனர். இஎனினும் ந்த தாக்கு தலில் கூட்டத்தில் பங்கேற்ற இரு வர் பரிதாபமாக உயிரிழந்துள்ள னர். டிரம்ப் மீது தாக்குதல் நடந்த  சில வினாடிகளிலேயே தாக்குதல் நடத்திய  நபரை பாதுகாப்புப்படை  வீரர்கள் சுட்டுக் கொன்றனர். இதில்  தாக்குதலை நடத்தியவர் 20 வய தான தாமஸ் மேத்யூ என பிறகு தெரியவந்துள்ளது. 

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன், முன் னாள் ஜனாதிபதி  ஒபாமா உள்  ளிட்டோரும், பல்வேறு நாடுகளின் தலைவர்களும், சுந்தர் பிச்சை, எலான் மஸ்க், உள்ளிட்ட கோடீஸ்  வரர்களும் கண்டனம் தெரிவித் துள்ளனர். 

பாதுகாப்பு குறைபாடு

டிரம்ப் நின்று இருந்த திறந்த வெளிமேடைக்கு பக்கவாட்டில் வெறும் 400மீட்டர் தூரத்தில் உள்ள  ஒரு கட்டடத்தின் கூரை மீது ஸ்னைப்  பர் வகை துப்பாக்கியுடன் சாதாரண மாக ஒரு மனிதர் டிரம்ப்பை நோக்கி  குறிபார்த்து கொண்டிருந்துள்ளார். இது குறித்து பாதுகாப்பு படை  வீரர்களுக்கு அங்கிருந்த மக்கள்  கூறியும் அவர்கள் எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை என தாக்குத லுக்கு பிறகு சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள் தெரிவித்தனர். இது அமெரிக்காவின் உளவுத்துறை  மற்றும் பாதுகாப்பு படையின் தோல்  வியை காட்டுகிறது என கடுமை யான விமர்சனங்கள் எழுந்துள்ளன.