world

img

தேர்தலை விரைவாக நடத்திடுக!

லிமா, டிச.13- தென் அமெரிக்காவின் பெரு நாட்டில் அந்நாட்டின் ஜனாதிபதி பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட பெட்ரோ காஸ்டில்லோவுக்கு ஆதரவாக மக்கள் குரல் எழுப்பி வருகிறார்கள். 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இடதுசாரிக் கொள்கைகளை முன்னி றுத்திய பெட்ரோ காஸ்டில்லோ பெரு நாட்டின் ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டார். நேரடியாக மக்களால் தேர்வு செய்யப்பட்ட இவருடைய அனைத்துத் திட்டங்களுக்கும் நாடாளுமன்றம் முட்டுக்கட்டை போட்டு வந்தது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்குப் பெரும்பான்மை இருந்ததே இதற்குக் காரண மாகும். மேலும், அமெரிக்காவின் ஆதரவும் அவர்களுக்கு இருந்தது. நாடாளுமன்றத்தின் தொடர் முட்டுக்கட்டை யால், பொதுத் தேர்தலை முன்கூட்டியே நடத்த  காஸ்டில்லோ திட்டமிட்டார். தனது மக்கள் நலக் கொள்கைகளுக்கு மக்களின் ஆதரவைப் பெறு வதே அவரது முயற்சியாக இருந்தது. ஆனால், நாடாளுமன்றமோ ஜனாதிபதிப் பொறுப்பில் இருந்து காஸ்டில்லோவை விடுவித்தது. அவரைக் கைது செய்ததோடு, முன்னாள் ஜனாதி பதிக்கு இருந்த பல்வேறு விலக்குகளையும் ரத்து  செய்துவிட்டது. ஜனாதிபதிக்கான தேர்தலில் காஸ்டில்லோவின் அணியில் இருந்து துணை ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற டினா போலுவார்ட்டே தற்போது ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றிருக்கிறார்.

கடந்த இரண்டு நாட்களாக காஸ்டில்லோ வுக்கு ஆதரவாக மக்கள் பெரும் எழுச்சியுடன் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார் கள்.  உடனடியாக நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு தேர்தல்களை நடத்த வேண்டும் என்று அவர்கள் கோரி வருகின்றனர். தலை நகர் லிமாவில் பல்வேறு சாலைகளை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர். தலைநகரில் மட்டுமில்லாமல், சாலா உள்ளிட்ட சிறிய நகரங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள்  காஸ்டில்லோவுக்கு ஆதரவான முழக்கங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்று வருகிறார்கள். மக்கள் எழுச்சியைக் கண்ட ஜனாதிபதி  போலுவார்டே அவசர நிலையை நடைமுறைப் படுத்தியுள்ளார். சமூக ரீதியாக எங்கெல்லாம் சச்சரவுகள் ஏற்படுகின்றனவோ அங்கெல்லாம் அவசர நிலை நடைமுறைப்படுத்தப்படும் என்று அவர் கூறியிருக்கிறார். காவல்துறையின் அடக்குமுறைக்கு இரண்டு பேர் பலியாகி யிருக்கிறார்கள். இதனால் மக்களின் கோபம் அதிகரித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரி வித்த ஜனாதிபதி போலுவார்டே, “உள்நாட்டு அமைதியை உடனடியாக மீட்டெடுக்க  வேண்டும் என்று நான் ஆணையிட்டுள்ளேன். அதுவும் அமைதியான முறையில் நடைபெற வேண்டும் என்றும் அழுத்தமாகக் கூறியிருக்கிறேன். மக்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்வது அவசியம்” என்று தெரிவித்துள்ளார்.

பெருமுதலாளிகள் சதி

வலதுசாரி எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பெரிய முதலாளிகள் கடந்த  18 மாதங்களாகப் பேசி வந்துள்ளனர். அவர்கள் நடத்திய சதி ஆலோனைகளின் குரல் பதிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. காஸ்டில்லோவை ஜனாதிபதிப் பொறுப்பிலிருந்து நீக்குவதற்கான வழிமுறைகளை அவர்கள் தொடர்ந்து விவாதித்துள்ளார்கள். இரண்டு மாதங்களுக்கு முன்பாகப் பேசிய காஸ்டில்லோ, “இவ்வளவு நாட்கள் ஆகியும் நான் ஜனாதிபதியாகி விட்டேன் என்பதை இவர்கள் ஏற்றுக் கொள்ளவேயில்லை” என்று எச்சரித்தார்.  முன்னாள் சர்வாதிகாரி ஃப்யூஜிமோரியின் ஆதரவாளர்கள் வன்முறை மூலம் காஸ்டில் லோவை வெளியேற்றுவோம் என்று மிரட்டி  வந்தனர். இடதுசாரி ஆதரவு ஊடகவிய லாளர்கள் தாக்குதலுக்கு உள்ளாகினர். தற்போது சூழல் திடீரென்று உருவாகவில்லை. இதற்காகப் பல மாதங்கள் வலதுசாரிக் கட்சிகள் அந்நிய சக்திகளின் உதவியுடன் தொடர்ந்து வேலை செய்து வந்தனர் என்று காஸ்டில் லோவின் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.