world

img

கலிபோர்னியாவில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு  

கலிபோர்னியாவில் பொதுமக்கள் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 6 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம், சேக்ரமென்டோ நகரில் இன்று அதிகாலையில் பொதுமக்கள் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.  கிட்டத்தட்ட 50 ரவுண்டுகள் சுட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 9 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைதொடர்ந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் மற்றும் துப்பாக்கி சூட்டிற்கான காரணம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.எல் சாண்டோ உணவகத்திற்கு அருகே காரில் வந்த ஒரு நபர், கூட்டத்தின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து துப்பாக்கிச்சூடு நடந்த பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ டுவிட்டரில் வெளியாகி உள்ளது. அதனைதொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்திய இடத்திற்கு பொதுமக்கள் யாரும் வரவேண்டாம் என காவல்துறை தரப்பில் கேட்டுக்கொண்டுள்ளது. 

;