world

ஹைட்ராக்ஸி குளோரோ குயினால் 17,000 பேர் மரணம்?

வாஷிங்டன், ஜன. 7- கொரோனா முதல் அலையின்  பொழுது மருத்துவ விஞ்ஞானிகள் மலேரியா எதிர்ப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (HCQ) உட்கொள்ளுமாறு கூறியிருந்த னர். இதனை மேற்கோள்காட்டி அமெரிக்காவின் அப்போதைய ஜனாதிபதியான டொனால்டு டிரம்ப் ஹைட்ராக்ஸி குளோரோகுயினை உட்கொள்ளுமாறு அமெரிக்கர்களை வலியுறுத்தினார். தொடர்ந்து துருக்கி, பெல்ஜியம், பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் இத்தாலி 5 நாடுகளும் ஹைட்ராக்ஸி குளோரோகுயினை பயன்படுத்த தொடங்கின.

இந்நிலையில் ஹைட்ராக்ஸி குளோரோகுயினால் அமெரிக்கா, துருக்கி, பெல்ஜியம், பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் இத்தாலி ஆகிய 6 நாடுகளிலும் 17,000 பேர்  இறந்திருக்கலாம் என பிரெஞ்சு ஆராய்ச்சியாளர்களின் ஆய்வில் கூறப்பட்டுள்ளதாக நியூஸ் வீக் தகவல் தெரிவித்துள்ளது.