world

img

சிரியா உள்நாட்டுப் போரில் ஆயிரக்கணக்கானோர் பலி!

சிரியா.மார்ச்.09- சிரியா உள்நாட்டுப் போரில் அப்பாவி மக்கள் ஆயிரக்கணக்கானோர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிரியாவில் முன்னாள் அதிபர் அல்-அசாத் ஆதரவுப் படையினருக்கும், அங்கு ஆட்சியைப் புதிதாகக் கைப்பற்றியிருக்கும் அரசின் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் நடந்துவரும் உள்நாட்டுப் போரில் 2 நாள்களில் ஆயிரக்கணக்கானோர் பலியானதாகப் போர் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் 745 பேரும், பாதுகாப்புப் படையினர் 125 பேரும், அசாத் ஆதரவாளர்கள் 148 பேரும் பலியாகினர். சிரியா வரலாற்றில் 14 ஆண்டுகால மோதல்களில் இது மிகவும் மோசமானது என்று கூறப்படுகிறது.