ரஷ்யா, சீனாவின் எல்லைகளுக்கு மத்தியில் அமைந்துள்ள கஜகஸ்தான் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக நடைபெற்ற மக்களின் போராட்டங்களால் அதிர்ந்து கொண்டிருக்கிறது. அங்கு நடைபெறும் தொடர் போராட்டங்கள் அமெரிக்கா உள்ளிட்ட இதர முதலாளித்துவ நாடுகளின் அரசாங்கங் களுக்கு ஓர் எச்சரிக்கையை விடுத்துள்ளதால் சர்வதேச ஊடகங்களின் கவனத்தையும் கூட அது ஈர்த்துள்ளது. பரந்த நிலப்பரப்பையும், 19 மில்லியன் (சுமார் 2 கோடி) மக்கள் தொகையையும் கொண்ட அந்த தேசத்தில் என்னதான் நடக்கிறது.? 1920 முதல் 1991 வரையில் சோவியத் யூனியனின் பகுதியாக இருந்த கஜகஸ்தான் சோவியத் பின்னடைவுக்குப் பிறகு தனி நாடாக பிரிந்து தன்னை ஒரு குடியரசாக அறிவித்துக் கொண்டது. உலக நாடுகளில் அதிக அள விலான எண்ணெய் தொகுப்பை கொண்ட தொரு நாடாக கஜகஸ்தான் இருப்பதோடு நாள் ஒன்றுக்கு 1.6 மில்லியன் பேரல் எண்ணெய் உற்பத்தித் திறனையும் கொண்டுள்ளது.
எண்ணெய் வர்த்தகத்தால் அந்நாட்டிற்கு பல பில்லியன் டாலர்கள் வருவாய் கிடைத்தா லும் கூட அது உள்நாட்டு மக்களுக்கு எந்த பலனையும் அளிக்காமல் பெரும் நிறுவனங் களின் லாபமாக மட்டுமே சுருங்கி நிற்கிறது. கஜகஸ்தான் மக்களின் சராசரி ஓராண்டு வருமான வரம்பு என்பது 2500 யூரோவிற்கும் குறைவாகத்தான் உள்ளது. மக்கள் பெருமளவில் தங்கள் வாகனங் களுக்கு பயன்படுத்தி வரும் திரவ பெட்ரோலிய வாயு விலையை அந்நாட்டு அரசு திடீரென பல மடங்கு உயர்த்தியதால் ஆவேசமடைந்த மக்கள் தன்னெழுச்சியான போராட்டங்களை துவக்கினர். பல்வேறு இடங்களில் எண்ணெய் நிறுவனங்கள், அரசாங்க அலுவலகங்கள், காவல் நிலையங்கள் போன்றவற்றை பல்லா யிரக்கணக்கானோர் முற்றுகையிட்டனர். எண்ணெய் பொருட்களின் மீதான தனது கட்டுப்பாட்டை அரசு விலக்கிக் கொண்ட தாலேயே கடுமையான விலை உயர்வு ஏற்பட்டுள்ளது; எனவே அரசு தனது முடிவை உடனடியாக திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து நாடு முழுவதும் மக்கள் தெருக்களில் திரண்டனர்.
அலமாட்டி நகரில் துவங்கிய போராட்டம் நாட்டின் பல நகரங்களிலும் நெருப்பைப் போல வேகமாக பரவியது. ஜனாதிபதி காசிம் ஜொமார்ட் டொகொயெவ் போராட்டத்தில் ஈடு படும் மக்களை தெருக்களில் கண்டதும் சுட உத்த ரவு பிறப்பித்ததோடு, எவ்வித பேச்சுவார்த்தை களிலும் அரசு ஈடுபடப் போவதில்லை என இறு மாப்போடு அறிவித்தார். ஆனாலும் போராட்ட ங்களை கட்டுப்படுத்த அரசால் இயலவில்லை. மக்களின் கோபத்தையும் போராட்டங் களையும் கட்டுப்படுத்த திணறிய கஜகஸ்தான் அரசாங்கம் பிறகு ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ஒருங்கிணைப்பில் உருவாக்கப் பட்டுள்ள கூட்டு பாதுகாப்புப் படை முகமை (Collective Security Treaty Organisation) யின் உதவியை நாடியது. அந்த படையைச் சேரந்த 2500க்கு அதிகமான துருப்புகள் கஜ கஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டு நிலைமை யை கட்டுக்குள் கொண்டு வர முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன. ஆனாலும் மக்கள் தங்கள் கோரிக்கையில் உறுதியாக நின்று போராட்டங் களை தொடர்ந்ததால் வேறு வழியின்றி அரசு இறங்கி வரவேண்டிய அவசியம் உருவானது. ஜனாதிபதி காசிம் ஜொமார்ட் டொகொ யெவ் தனது அரசின் தோல்வியை ஒப்புக் கொண்டு ஒரு சில அமைச்சர்களை பதவியில் இருந்து விலக்கி வைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.
எண்ணெய் விலைகளின் மீதான கட்டுப்பாட்டை விலக்கிக் கொள்வது எனும் அரசின் முடிவை திரும்பப் பெற்றுக் கொள்வதோடு, அடுத்த ஆறு மாதத்திற்குள் அனைத்து எரிபொருட்களின் விலைகளையும் கட்டுப்படுத்தவும், பணவீக்கத்தை குறைக்க வும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும் என அறிவித்தார். களத்தில் 164 உயிர்களை பலி கொடுத்த போதிலும், உறுதியோடு நின்ற மக்கள் தங்கள் போராட்டத்திலும், கோரிக்கையிலும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காகவும், மக்களின் நலன்களுக்கு எதிராகவும் எப்போதெல்லாம் அரசாங்கங்கள் முடிவெடுக்கிறதோ அப்போதெல்லாம் சாமானிய மக்கள் கிளர்ந்து எழுந்து அரசை மண்டியிட வைப்பார்கள் என்பதற்கு சான்றா கவே தில்லி விவசாயிகள் போராட்டமும், கஜகஸ்தான் மக்களின் எழுச்சியும் அமைந்துள் ளன. மக்களின் இத்தகைய போராட்டங்கள் மேலும் மேலும் வலுப்பெறும் என்பதாலேயே ஒவ்வொரு முறையும் அடக்கி விடலாமெனும் முனைப்போடு ஆயுதங்களை தூக்குகின்றன முதலாளித்துவ அரசுகள். ஆனாலும் களங் களில் உறுதியோடு உயரும் மக்களின் கரங்களே வெற்றியைப் பெறுகின்றன. - ஆர்.பத்ரி