world

img

மீத்தேன் வாயு சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் விபத்தில் 8 தொழிலாளர்கள் பலி  

செர்பியாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட விபத்தில் 8 சுரங்க தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.  

செர்பியா நாட்டின் தலைநகரான பெல்கிரேடிலிருந்து தென்கிழக்கே 200 கிலோமீட்டர் (125 மைல்) தொலைவில் அமைந்துள்ள சோக்‍கோபஞ்சா நகருக்‍கு அருகே செயல்பட்டு வரும் சுரங்கத்தில் 49 தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். அப்போது திடீரென சுரங்கத்தினுள் மீத்தேன் வாயுவின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் சுரங்கத்தில் இருந்த தொழிலாளர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 8 சுரங்க தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 18 தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர். இதையறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.  

இதேபோன்று 1998 ஆம் ஆண்டு இதே சோக்கோபஞ்சா சுரங்கத்தில் 27 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த சுரங்கத்தில் அடிக்கடி மீத்தேன் வாயு தாக்குதலில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், இப்பிரச்சினையை சரிசெய்ய தொழிலாளர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகின்றனர்.