பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் அபு அக்லேவைக் கொலை செய்தது இஸ்ரேலியப் படைகள்தான் என்று ஐக்கிய நாடுகள் சபை உறுதி செய்துள்ளது.
அவரது கொலை பற்றி ஆய்வு செய்து ஐ.நா.சபையின் மனித உரிமைகள் ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கை இதைத் தெரிவித்திருக்கிறது. கடந்த மாதத்தில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்தபோது அபு அக்லே சுடப்பட்டார். அவரது கொலைக்கு ஆயுதந்தாங்கிய பாலஸ்தீனர்கள்தான காரணம் என்று இஸ்ரேல் கூறி வந்தது. ஆனால், கொலை குறித்து ஆய்வு செய்துள்ள ஆணையம், அவரது உடலில் பாய்ந்த குண்டுகள் இஸ்ரேல் ராணுவத்திற்குச் சொந்தமானது. அதோடு, அச்சமயத்தில் ஆயுதந்தாங்கிய பாலஸ்தீனர்கள் யாரும் அப்பகுதியில் இல்லை என்று தனது அறிக்கையில் கூறியுள்ளது.