வாஷிங்டன், மார்ச் 15- தனியார் மயமாக்கப்பட்டுள்ள அமெ ரிக்க சிறைத்துறை பெரும் அளவில் லாபத் தைத் தரக்கூடிய துறையாக மாறியிருக்கிறது. அமெரிக்காவில் உள்ள பல்வேறு சிறை களில் 20 லட்சம் கைதிகள் உள்ளனர். சிறை கள் தனியார் மயப்படுத்தப்பட்டுள்ள நிலை யில் கைதிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டிய கட்டாயமும் உள்ளது. எண் ணிக்கை உயர, உயர சிறைகளை நிர்வகிக் கும் தனியார் நிறுவனங்களுக்கு லாபம் கொட்டுகிறது. இந்த தனியார் சிறைகளில் மனித உரிமைகளுக்கு எல்லாம் எந்த வித மான இடம் தரப்படுவதில்லை. கடுமையான மீறல்கள் உள்ளன. 1980களில் சிறைகள் தனியார் நிறுவனங் களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டன.
மாகாணங்களில் உள்ள சிறைகள் போது மானதாக இல்லை என்று சொல்லப்பட்டா லும், இதில் கொழுத்த லாபம் கிடைக்கும் என்பதே தனியார் மயமாக்கலுக்குக் கார ணமாக இருந்தது. கைதிகளின் மறுவாழ் விற்காகக் கொண்டு வரப்படும் திட்டங்கள் தனியார் நிறுவனங்களின் லாப வேட்டை நல்ல தீனியாக மாறியிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சிறைகளை நிர்வகிக்க அரசு ஒதுக்கும் நிதியும் அதிகரித்துக் கொண்டே வந்திருக்கிறது. இந்த சிறைகளில் அடைக்கப்பட்டி ருப்பவர்களில் ஏழைகள் மற்றும் சிறுபான் மையினர் ஆகியோர்தான் அதிகமாக இருக்கிறார்கள். இவர்களால் வழக்கறி ஞர்களுக்கு கட்டணம் தந்து வாதாடுவதற் கான பணம் தர முடியாது.
பெரும்பா லும் மோசமானவர்கள் என்று இவர்களை முத்திரை குத்தி சிறையில் அடைத்து விடுகிறார்கள். வெள்ளை அமெரிக்கர்க ளோடு ஒப்பிடுகையில் கருப்பர்களும், லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்தவர்களும் நான்கு மடங்கு அதிக எண்ணிக்கையில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அகதிகளாக வருபவர்களால் சிறையை நிர்வகிக்கும் நிறுவனங்களுக்குக் கொள்ளை லாபம் கிடைக்கிறது. எந்தவித ஆவணமும் இல்லாமல் அவர்களை சிறை யில் வைத்துக் கொண்டு சொற்ப கூலி யைக் கொடுத்து அவர்களிடம் வேலை வாங்குகிறார்கள். இந்தக் கொடுமைகளு க்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன. அண்மையில் ஆயிரக் கணக்கான மக்கள் பங்கேற்ற போராட்டங் கள் அமெரிக்காவின் பல நகரங்களில் நடை பெற்றுள்ளன.