பாரீஸ், ஆக.25- இஸ்ரேலுக்கு ஆதரவாக இல்லாத காரணத்தால் டெலிகிராம் செயலி யின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான பாவெல் துரோவ், பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள தாக கூறப்படுகிறது.
39 வயதான பிரான்ஸ்-ரஷ்ய கோடீஸ்வரரான இவர், சனிக்கிழமை மாலை பிரான்ஸ் தலைநகர் பாரீசுக்கு வடக்கே உள்ள லு போர்கெட் விமான நிலையத்தில் தடுத்து கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இஸ்ரேல் எதிர்ப்பு ஹேக்கர்கள் இஸ்ரேல் நாட்டின் ரகசியத் தரவுகளை திருடி டெலிகிராம் செயலிவழியாக வெளியிட்டு வருவதாக ஏற்கனவே இஸ்ரேல் குற்றம் சாட்டியது. இந்த குற்றச்சாட்டை டெலிகிராம் நிறுவனம் மறுத்திருந்தது.
டெலிகிராம் செயலி வழியாக போதைப்பொருள், குழந்தைகள் கடத்தல், ஆபாச காணொலிகள் பகிர்வு மற்றும் பல வகை மாபியா கும்பல் தொடர்புடைய குற்றங்கள் தடையின்றி நடைபெறுவதாகவும் அதை செயலி யின் நிறுவனர் தொடர்ந்து தடுக்க தவறி வந்துள்ளார் எனவும் இவரது கைதுக் கான காரணமாக கூறப்படுகிறது.
டெலிகிராம் செயலி வழியாக போதைப்பொருள், குழந்தைகள் கடத்தல், ஆபாச காணொலிகள் பகிர்வு மற்றும் பல வகை மாபியா கும்பல் தொடர்புடைய குற்றங்கள் தடையின்றி நடைபெறுவதாகவும் அதை செயலி யின் நிறுவனர் தொடர்ந்து தடுக்க தவறி வந்துள்ளார் எனவும் இவரது கைதுக் கான காரணமாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலைப் போரில் தகவல் பரிமாற்றத்திற்கும், இஸ்ரேலின் போர்க்குற்றங்களை அம்பலப்படு த்தும் முக்கிய செயலியாகவும் டெலி கிராம் இருந்து வந்தது.
டெலிகிராமில், இஸ்ரேலின் குற்றங்களை அம்பலப்படுத்தக்கூடிய பல பக்கங்களை தணிக்கைக்கு உட்படு த்தவும், முடக்கவும் இஸ்ரேல் அழுத்தம் கொடுத்து வந்தது. இஸ்ரேலின் விருப்ப த்தை ஏற்காத நிலையில் பாவெல் கைது செய்யப்பட்டுள்ளதாக சுயேட்சையான பத்திரிக்கையாளர்கள் மற்றும் செய்தி நிறுவனங்கள் குற்றம்சாட்டியுள்ளன.