world

img

காசா மீது இஸ்ரேல் போர் சில முக்கிய கள நிகழ்வுகள்

uஐ. நா. பாதுகாப்பு கவுன்சில் காசாவுக்கு உதவிகள் குறித்து  தீர்மானம் எண் 2722இயற்றியுள்ளது. ஐக்கியஅரபு அமீரகம் முன்மொழிந்த அந்த தீர்மானத்துக்கு 15 உறுப்பினர்களில் 13 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. எந்த தேசமும் எதிர்த்து வாக்களிக்கவில்லை. தனது வீட்டோவை பயன்படுத்தாமல் இருக்க அமெரிக்காவின் பல வேண்டுகோளுக்கு இசைந்து தீர்மானம் மிகவும் நீர்த்துப் போகச்செய்ய வேண்டிய அவசியம் உருவானது. உடனடி தொடர் போர் நிறுத்தம் எனும் தனது திருத்தத்தை அமெரிக்கா வீட்டோ மூலம் தடுத்த காரணத்தால் ரஷ்யாவும் நடுநிலை வகித்தது. இந்த தீர்மானம் எதிர்பார்ப்புக்கு ஏற்றதாக இல்லை என பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

uகாசாவின் அனைத்து குடும்பங்களும் பசி பட்டினியால் வாடும் நிலை உருவாகியுள்ளது என ஐ .நா.வின் பசி கண்காணிப்பு குழு கூறியுள்ளது. காசாவின் வடக்கு பகுதியில் 5இல் 4 குடும்பங்களும் தெற்குப் பகுதியில் பாதி குடும்பங்களும் முழு நாளும் உணவு இல்லாமல் பசியோடு வாழ்கின்றனர் எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

uஇந்த போரில் 3000 இஸ்ரேல் வீரர்கள் நிரந்தரமாக கை அல்லது கால்களை இழந்துள்ளனர் என இஸ்ரேலிய பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. ஹமாஸ் வீரர்கள் திட்டமிட்டு இஸ்ரேலிய வீரர்களை வலைக்குள் சிக்க வைத்து பெரும் தாக்குதலுக்கு வழி வகுக்கின்றனர் என வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை தெரிவிக்கிறது. 

uமுன்னாள் இஸ்ரேல் பிரதமர் எஹுட் ஓல்மர்ட் காசாவில்ஹமாஸ் அமைப்பை அழிப்பது எனும் நெதன்யாகுவின் எண்ணம் நிறைவேறப்போவது இல்லை என ஆணித்தரமாக கூறியுள்ளார். தனது சுய நினைவுடன் நெதன்யாகு செயல்பட்டிருந்தால் ஹமாசை அழிப்பது எனும் இலக்கை முன்வைத்திருக்க மாட்டார் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். உடனடியாக போர் நிறுத்தம்செய்து பணயக்கைதிகளை விடுவியுங்கள். இல்லையேல் பின்னால் உலகத்தின் ஆதரவை இழந்து போரை நிறுத்த வேண்டியிருக்கும். அப்பொழுது ஹமாசின் கை ஓங்கியிருக்கும். அது மேலும்  ஆபத்தானது எனவும் அவர் கூறியுள்ளார். இஸ்ரேல் அரசியல்வாதிகளிடையே உருவாகிவரும் ஆழமான முரண்பாடுகளை இது வெளிப்படுத்துகிறது. 

uஹமாசின் பணயக்கைதியாக இருந்து பின்னர் விடுவிக்கப்பட்ட சஹர் கால்டரோன் எனும் பெண்மணி தான்உயிரிழந்தால் அதற்கு இஸ்ரேலின் குண்டு வீச்சுதான் காரணமாக இருக்கும் எனவும் ஒரு போதும் ஹமாசால் தனக்கு ஆபத்து வரப்போவது இல்லை எனவும் அடிக்கடி நினைத்ததாக தெரிவித்துள்ளார். 

uராபர்ட் பேப் எனும் ராணுவ வரலாற்றாசிரியர் 1942-45 வரை இட்லரின் ஜெர்மனியை ரஷ்யா/ அமெரிக்கா உட்பட நேச நாடுகள் தாக்கிய 3 ஆண்டுகளில் 10 சதவீதகட்டிடங்கள்தான் பாதிக்கப்பட்டன எனவும் காசாவை இஸ்ரேல் தாக்கிய 65 நாட்களில் 33 சதவீத கட்டிடங்கள் அழிக்கப்பட்டுவிட்டன எனவும் ஒப்பீடு செய்துள்ளார். 70 சதவீத பள்ளிகள்/110 மசூதிகள்/ 3 மிகப்பெரியதேவாலயங்கள் ஆகியவை காசாவில் தகர்க்கப்பட்டுள்ளன என ஐ.நா. தெரிவித்துள்ளது. 

uஅமெரிக்காவின் ஒரு அமைப்பு சவூதி அரேபியாவில் நடத்திய ஆய்வில் 96 சதவீதம் பேர் அனைத்து அரேபியநாடுகளும் இஸ்ரேலுடன் உள்ள ராஜ்ய உறவுகளைமுறித்து கொள்ள வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர். அரேபிய மக்களிடையே பாலஸ்தீனத்துக்கும் ஹமாசுக்கும் பெருகிவரும் ஆதரவை இது வெளிப்படுத்துகிறது. எனவேதான் அரேபிய நாடுகளின் அர
சாங்கங்கள் அமெரிக்காவின் அறிவுரைகளை நிராகரிக்க நிர்ப்பந்தப்பட்டுள்ளனர்.