பாகிஸ்தானில் கராச்சி விமான நிலையத்திற்கு வெளியே நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 2 பேர் உயிரிழந்தனர். 8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நேற்று இரவு 11 மணியளவில் நடைபெற்றுள்ளது. விமான நிலையத்திற்கு வெளியே நின்றிருந்த டேங்கர் வெடித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்த இருவரும் சீனர்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இந்த சம்பவத்தை பயங்கரவாதத் தாக்குதல் என்று குறிப்பிட்டு தங்களது கண்டனத்தை சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
அந்த மாகாணத்தின் உள்துறை அமைச்சர் சியா உல் ஹசன் இது வெளிநாட்டினரைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், பாகிஸ்தானில் உள்ள சீனர்கள் மீது குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.