கடந்த நான்காண்டுகளாக தொட ர்ந்த தீவிர பேச்சுவார்த்தைகள், கொரோனா ஏற்படுத்திய தடைகளின் முடிவில் சீனாவின் தலைமையில் மாண்ட்ரீல் நகரில் கூடிய காப்15 உலக உயிர்ப் பன் மயத்தன்மை உச்சி மாநாடு வரலாற்று உடன்படிக்கையுடன் நிறைவடைந்துள்ளது. யு.எஸ்.வாட்டிகன் தவிர சுமார் 200 நாடு கள் இதில் கையெழுத்திட்டுள்ளன. டிசம்பர் 7இல் தொடங்கிய காப்15 முதல்நாள் இரவு ஏழுமணி நேர நீண்ட பேச்சுவார்த்தைகள், விவாதங்களுக்குப் பிறகு டிசம்பர் 19இல் இந்த நூற்றாண்டின் பாதிவரை இயற்கை யுடன் சமாதானமாக வாழும் வழியைக் காட்டும்விதத்தில் அமைந்த ஒப்பந்தத்துடன் முடிந்துள்ளது.
சீனத் தலைவரின் மகத்தான பங்கு
இறுதி உடன்படிக்கை ஏற்பட்டதை காப்15 தலைவர் மற்றும் சீன சுற்றுச்சூழல் அமைச் சர் ஹுவான் ரன்கியூ (HuangRunqiu) பிரதிநிதிகளின் கரகோஷத்திற்கு இடையில் அறிவித்தார். உடன்படிக்கை உருவாவதில் சீனத் தலைவர் ஜிஜின் பிங் (Xi Jinping) தீவிர பங்காற்றியதை பிரதிநிதிகள் பாராட்டி னர். பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பிளாஸ்டிக் கழிவுகளால் நிரம்பி வழியும் கடல்கள் அமிலமாகின்றன. உலக மக்கள்தொகை 800 கோடியைத் தொட்டு விட்டது. இயற்கை வளங்களின் மனித நுகர்வு மிதமிஞ்சி சென்று கொண்டிருக்கிறது. இச்சூழலில் உருவாகியுள்ள இந்த உடன் படிக்கை நடைமுறைப் படுத்தப்படும்போது வேளாண்மை, வணிகரீதியான சரக்குப் பொருட்களின் விநியோக சீரமைப்பு, பழங்குடியினரின் இயற்கை வளப் பாதுகாப்பு போன்றவை காப்15 மாநாட்டின் பல முக்கிய இலக்குகள் நனவாகும். 30x30 வரும் 2030ஆம் ஆண்டிற்குள் பூமியின் 30 சதவீதம் நிலம் மற்றும் கடற்பரப்பை இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காக ஒதுக்கும் 30/30 என்ற திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இயற்கையை அழிக்கும் வகையில் அரசுகளால் வழங்கப் படும் 500 பில்லியன் டாலர் மானிய உதவி யை மறுசீரமைக்க ஒப்புக்கொள்ளப் பட்டுள்ளது.
வளமிழந்த பூமியின் 30 சதவீத நிலம், உள்நாட்டு நீர்வழி, கடலோரப்பகுதி மற்றும் கடல்சார் சூழல் மண்டலங்களை மீட்கவும் இறுதி வரைவறிக்கையில் ஒப்புதல் வழங்கப் பட்டுள்ளது. டைனோசார் காலத்திற்குப் பிறகு பூமியில் இன்று வாழும் பத்தில் ஒரு உயிரினம் அழிந்துகொண்டிருக்கிறது. மனிதச்செயல் களால் டைனோசார் காலப் பேரழிவிற்குப் பிறகு இப்போது ஆறாம் இனப்பேரழிவு நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் அரசுகள் உடனடியாக உயிரின அழிவைத் தடுத்து நிறுத்த நட வடிக்கை எடுக்க ஒப்புக்கொண்டுள்ளன.
1.5 டிகிரியும் 30சதவீத ஒதுக்கீடும்
காப்15 மாநாட்டை சிறந்தமுறையில் நடத்திய சீனாவைப் பாராட்டியுள்ள கனடா சூழல் அமைச்சர் ஸ்டீவன் கில்போல்ட், குன்மிங் (Kunming)மாண்ட்ரீல் மாநாடு உடன்படிக்கை இயற்கையைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட மிகத் துணிச்சலான நட வடிக்கை என்று கூறியுள்ளார். சீனா குன்மிங் நகரில் 2020இல் நடைபெற இருந்த இம்மாநாடு கொரோனா பரவலால் ஒத்தி வைக்கப்பட்டது. கடந்தகாலத்தில் அரசுகள் ஒப்புக்கொண்ட இலக்குகள் எவற்றையும் நிறைவேற்றாத நிலையில் இம்மாநாடு பல ஆண்டுகாலத் தோல்விகளை சரிசெய்துள் ளது. காலநிலை மாநாட்டின் 1.5 டிகிரி இலக்குடன் ஒப்பிட்டுக் கூறப்படும் இயற்கை பாதுகாப்பிற்காக 30 சதவீத நிலம் மற்றும் கடற்பரப்பை ஒதுக்கும் தீர்மானத்தை உலக வன நிதியம் உட்பட பல பன்னாட்டு சூழல் அமைப்புகள் வரவேற்றுள்ளன. ஐரோப்பிய ஒன்றியம், யு.கே. பிரான்ஸ் போன்றவை வளங்களைக் காக்க தனி நிதியம் ஏற்படுத்த வேண்டும் என்று கோரின.
இயற்கை வளம் காக்க நிதியம்
பூமியில் மூன்று பெரிய மழைக்காடுகள் அமைந்துள்ள பிரேசில், இந்தோனேஷியா, காங்கோ மக்கள் குடியரசு ஆகிய நாடுகள் இக்கோரிக்கையை வலுவாக ஆதரித்தன. கடைசிநேர சர்ச்சைகளுக்குப் பின் ஐநாவின் சூழல் காப்பு நிதிவசதி (the Global Environ mental Facility GEF) கட்டமைப்பிற்குள் இதற் கான நிதியம் ஏற்படுத்த ஒப்புக்கொள்ளப் பட்டது. இந்த பத்தாண்டு முடிவதற்குள் பணக்கார நாடுகள் இதற்காக 30 பில்லியன் டாலர் வழங்க சம்மதித்துள்ளன. இது ஐநா கட்டமைப்பிற்குள் இப்போது இருக்கும் ஒதுக்கீட்டை விட அதிகம்.
தேசிய உயிர்ப் பன்மயத்தன்மைத் திட்டம்
உயிர்ப் பன்மயத்தன்மைக்கான காப் ஒப்பந்தங்கள் சர்வதேசச் சட்டப்படி எந்த நாட்டையும் கட்டுப்படுத்தாது என்றாலும் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த பாரிஸ் உடன்படிக்கையில் கூறப்பட்டதற்கு ஏற்ப உலக நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் காலநிலை மாநாட்டில் அவர்கள் எடுத்த நடவடிக்கைகள் பற்றிய செயல் திட்டங்களை சமர்ப்பிப்பது போல நாடுகள் உயிர்ப் பன்மயத்தன்மையைக் காக்க எடுத்த நடவடிக்கைகளைப் பற்றிக் கூறும் தேசிய உயிர்ப்பன்மயத்தன்மைத் திட்டங்களை (National Biodiversity Plans - NBPs) பத்தாண்டிற்கு ஒரு முறை நடக்கும் மாநாட்டில் ஒப்படைக்கவேண்டும்.
மரபணு வரிசை தகவல் பரிமாற்ற ஒப்பந்தம்
உயிர்ப் பன்மயத்தன்மை மூலம் டிஜிட்டல் பண்ணைகளில் இருந்து கிடைக்கும் மருந்துகள் கண்டுபிடிப்பு, தடுப்பூசிகள், உணவுப்பொருட்கள் பற்றிய தகவல் பரிமாற்றம் (Digital Seequencing Informa tion - DSI) தொடர்பாக ஒப்பந்தம் ஏற்பட்டுள் ளது. இதன் மூலம் டிஜிட்டல் திருட்டை (digital piracy) குறைக்கமுடியும். காப்15 உடன்படிக்கை பூமியை அழிவில் இருந்து காக்க பெரிதும் உதவும் என்று உலக வன நிதியத்தின் அறிவியல் மற்றும் இயற்கைப் பாதுகாப்பு யு.கே.பிரிவு செயல் இயக்குநர் மைக் பேரட் கூறுகிறார்.
பழங்குடியினரின் பங்கு
இயற்கை பாதுகாப்பில் பெரும் பங்காற்றி வரும் பழங்குடியினருக்கு உடன்படிக்கை யில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அமேசான் உட்பட உலகின் பல மழைக்காடுகளை நேரடியாகவும் மறை முகமாகவும் பாதுகாத்துவரும் மில்லியன் கணக்கான பழங்குடியின மக்களுக்கு அவர் களின் வாழிட உரிமை, வனப்பகுதிகளை பாதுகாப்பதற்கு சட்டப்பூர்வமான உரிமை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆட்சியாளர்களின் முழு ஆதரவுடன் வனச்செல்வங்களைக் கொள்ளையடிக்கும் பன்னாட்டு பணக்கார நிறுவனங்களின் வன்முறைத் தாக்குதல் களில் இருந்து பழங்குடியினர் காக்கப்படு வர் என்று சர்வதேச இயற்கை வளப் பாது காப்பிற்கான பழங்குடியினர் அமைப்பின் (International Indiginous Forum on Biodiversity IIFB) பிரதிநிதி விவியானா ஃபீக ரோவா (Viviana Figueroa) கூறுகிறார்.
வரலாறு படைத்த மாண்ட்ரீல் மாநாடு
இயற்கையையும், உயிரினங்களையும் அழிக்கும் பூச்சிக்கொல்லிகளைக் கட்டுப் படுத்துவது தொடர்பாகவும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது இந்த உடன்படிக்கையின் தனிச்சிறப்பு என்று பிரான்ஸின் சூழல் மாற்றத்திற்கான அமைச்சர் கிறிஸ்டொபி பெச்சு (Christopae Bechu) கூறுகிறார். உயிர்ப் பன்மயத்தன்மையைக் காக்க வழங்கப்படும் நிதியுதவி 2025 வரை இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2030இல் இது மூன்று மடங்காக உயரும். ஆறு மாதங்களுக்கு முன்பு இப்படி ஒரு மாநாடு நடைபெறுமா என்பது கேள்விக்குறி யாக இருந்தது. ஆனால் இன்று சீனத் தலைவரின் ஒப்பற்ற வழிகாட்டுதலில் உலக நாடுகளின் ஒத்துழைப்புடன் பாலேய்ஸ் டெஸ் காங்ரெஸ் (Palais des congres) மாண்ட்ரீலில் இருவார காலம் நடந்து முடிந்துள்ள காப்15 உயிர்ப் பன்மயத்தன்மை உச்சி மாநாடு காலநிலையைக் காக்க 2015இல் பாரிஸில் கூடிய மாநாட்டின் மகிழ்ச்சி யையும் மன நிறைவையும் ஏற்படுத்தியுள் ளது. உலக நாடுகளால் உடன்படிக்கையின் அம்சங்கள் நடைமுறைப்படுத்தப்படும் போது இதே மகிழ்ச்சியும், மன நிறைவும் ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் ஏற்படும் என்பதில் ஐயமில்லை.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்