world

img

துருக்கி - சிரியா நிலநடுக்க பலி 17 ஆயிரமாக உயர்வு

அங்காரா, பிப். 9 - மத்திய கிழக்கு நாடுகளான துருக்கி - சிரியாவில் கடந்த திங்களன்று நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17,176 ஆக அதிகரித்துள்ளது. அரசு வெளியிட்ட தகவலின்படி துருக்கியில் பலி எண்ணிக்கை 14,014 ஆகவும், சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில்  1,900 பேரும், அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் 1,262 பேரும் என 3,162 பேர் உயிரிழந்துள்ள னர்.  உள்நாட்டு மற்றும் சர்வதேச மீட்புக் குழுவினர், செஞ்சிலுவை சங்கத்தினர், பொதுமக்கள், பத்திரிக்கையாளர் என பல்வேறு தரப்பினரால் மீட்பு பணி நடைபெற்று வருவதால் இருநாடுகளிலும் காயமடைந்தவர்கள் விபரம் தொடர்பாக தெளிவான  தகவல் வெளியாகவில்லை. எனினும் துருக்கியில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை  நெருங்கியுள்ளது என்றும், சிரியாவில் கிளர்ச்சியாளர் களின் கட்டுப்பாடு, அரசுக் கட்டுப்பாடு என 2 பிரிவாக  இருப்பதால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை திடமாக கணக்கிட முடியவில்லை என சர்வதேச செய்தி நிறுவனங்கள் தோராயமாக தகவல் வெளியிட்டு வருகின்றன.

துருக்கியில் 28,000 பேர் வெளியேற்றம்

தெற்கு துருக்கியின் கஹ்ராமன்மாரஸா பகுதியில் நிலநடுக்கத்தில் இருந்து தப்பிய மக்களில் 28,044 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். 23,437 பேர் விமானம் மூலமாகவும், 4,607 பேர் சாலை, ரயில் மூலமாக வும் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று துருக்கியின் பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. 

(முன் வந்த செய்தி - 6ஆம் பக்கம்)