மோசமான செயலில் ஈடுபட்டால் எம்.பி.க்களுக்கு அபராதம்
ஆஸ்திரேலியாவில் பணியிடச் சட்டத்தின்படி மோசமாக நடந்துகொள்ளும் எம்.பி.க்கள் ஊதியத்தில் 5 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும் அல்லது இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற வளாகத்திற்குள் நடைபெற்ற பாலியல் வன்கொடுமையை தொடர்ந்து இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும் இந்த சட்டம் நேர்மையாக அமல்படுத்தப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.
ஷேக் ஹசீனா மீது மேலும் 9 வழக்குகள்
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது உதவியாளர் மீது மேலும் 9 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ஷேக் ஹசீனா மீதான வழக்குகளின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே அவர் மீது 26 கொலைக் குற்றச்சாட்டுகளும், மனிதநேயம் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான 4 குற்ற வழக்குகளும், ஒரு கடத்தல் வழக்கும் பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜார்ஜ் பிளாய்ட் கொலைக் குற்றவாளி மீண்டும் சிறையிலடைப்பு
ஹரிசோனா சிறையில் கத்தியால் குத்தப் பட்ட ஜார்ஜ் பிளாய்ட் கொலைக் குற்ற வாளி ஒன்பது மாதங்களுக்குப் பிறகு மீண்டும் டெக்சாஸில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். டெரெக் மைக்கேல் என்ற காவல் அதிகாரி ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தவரை படுகொலை செய்ததற்காக கைது செய்யப்பட்டார். அவர் அடைக்கப்பட்டிருந்த சிறையில் 20 முறைக்கும் மேல் கத்தியால் குத்தப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது சிகிச்சை முடிந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பெண்களை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய மருத்துவர் கைது
பல ஆண்டுகளாக குழந்தைகள் மற்றும் பெண் களை நிர்வாணமாக படங்கள், வீடியோக்களை பதிவு செய்த உமைர் அஜாஸ் என்ற இந்திய மருத் துவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். தனது வீடு, மருத்துவமனை உள்ளிட்ட பல இடங்க ளில் ரகசிய கேமிராக்கள் வைத்து பெண்கள், குழந் தைகளை நிர்வாணமாக படம்பிடித்துள்ளார். கைது செய்யப்பட்ட பிறகு அவரது கணினிகள், தொ லைபேசிகள்,ஹார்ட் டிரைவ் உள்ளிட்ட 15 சாதனங் களில் இருந்து 13,000 வீடியோக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐ.நா. ஊழியர்களை விடுவிக்க வலியுறுத்தல்
ஏமன் ஹவுதி அமைப்பால் கைது செய்யப்பட்டுள்ள ஐ.நா. ஊழியர்களை உடனடியாக எந்த நிபந்தனையும் இன்றி விடுவிக்க வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார். ஹவுதி அமைப்பால் ஐ.நா. பணியாளர்கள் மட்டுமின்றி சிவில் சமூக உறுப்பினர்கள், தேசிய மற்றும் சர்வதேச அரசு சாரா நிறுவனங்களின் ஊழியர்களும் 2 மாதங்களுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களையும் விடுதலை செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.