தைவான், சீனா, வடகொரியா, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் தொடர்ந்து அளவுக்கு அதிகமாக மழைபொழிகிறது. இந்த மழைபொழிவினால் ஏற்படும் நிலச்சரிவு,வெள்ளம் உள்ளிட்ட இயற் கைப் பேரிடர்களால் ஒருவாரத்தில் மட்டும் 300 க்கும் அதிகமான மக்கள் பலியாகி யுள்ளனர்.
ஆசிய நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பருவமழை பொழிவதுடன் பல இடங்க ளில் புயல் காற்றும் வீசும் . தற்போது காலநிலை மாற்றத்தின் காரணமாக போதிய மழைப்பொழிவு இன்றி வறட்சி, அதிக வெப்பம் அல்லது கனமழை, புயல் வீசி வருகிறது. கனமழையால் நிலச்சரிவு, வெள்ளம் ஏற்பட்டு பலர் பலியாகி யுள்ளனர்.
கெய்மி சூறாவளியின் காரணமாக கடந்த வாரம் பிலிப்பைன்ஸ் நாட்டில் 30 க்கும் மேற்பட்டவர்களும், தைவானில் 10 பேரும் பலியாகினர்.
சீனாவின் ஹுனான் மாநிலத்தில் தொடர் மழையின் காரணமாக ஜூலை மாதம் இறுதி வாரத்தில்இரண்டு இடங்க ளில் ஏற்பட்ட மண் சரிவில் 18 பேர் பலியாகி னர். அதே போல ஜிக்சிங் நகரில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 30 பேர் இறந்துள்ள னர்.35 பேர் காணாமல் போயுள்ளனர்.
வடகிழக்கு சீனாவுடன் இணையும் வட கொரிய எல்லையில் மேகவெடிப்பைத் தொடர்ந்து உருவான கனமழையால் இரு நாட்டு எல்லையில் உள்ள யாலு நதி நிரம்பி வெள்ளம் உருவானது. இத னால் வட கொரியாவில் சுமார் 4,100 வீடு கள், 7,400 ஏக்கர் விவசாய நிலங்கள் கட்டிடங்கள், சாலைகள் மற்றும் ரயில் பாதைகள் வெள்ளத்தில் மூழ்கின.
இந்தியாவின் கேரளா, உத்தரகண்ட், தில்லி உள்ளிட்ட மாநிலங்களில் அதிக மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
அதிகபட்சமாக கேரள நிலச்சரிவில் 300 க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி யுள்ளனர். பாகிஸ்தானின் லாகூர் நகரில் 44 ஆண்டுகளுக்கு பிறகு மிக அதிகமாக 353 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
காலநிலை மாற்றத்தின் காரணமாக ஆசியாவில் பல நாடுகள் பெரும் இயற் கைப் பேரிடர்களை சந்தித்து வருகின்றன. குறிப்பாக ஏழ்மை நிலையில் உள்ள மற்றும் வளரும் நாடுகள் அதிக அள விலான பொருளாதார சேதங்களை எதிர்கொள்கின்றன.
இந்த நாடுகள் தங்களுடைய பொரு ளாதார சேதங்களில் இருந்து மீண்டு வரவும், நிவாரண மீட்புப் பணிகளை மேம் படுத்திக் கொள்ளவும், வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகளுக்கு இழப்பு மற்றும் சேத நிதி (loss and damage fund) கொடுத்து உதவிட வேண்டும் என கடந்த ஆண்டு ஐ.நா. காலநிலை மாற்ற மாநாட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் இந்த திட்டம் முழுமையான செயல்பாட்டிற்கு வரவில்லை.