ஜெருசலேம், செப். 26- இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் வியாழக்கிழமை அன்று, லெபனானில் 21 நாள் போர்நிறுத்தத்திற்கான அமெரிக்கா மற்றும் பிரான்ஸின் முன்மொழிவுகளை நிராகரித்தார். அதேசமயம் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தாம் பதிலளிக்கவில்லை என்றும், ஆனால் ராணுவத்தி டம் நடவடிக்கையைத் தொடருமாறு கூறியதாகவும் தெரிவித்தார்.
“வடக்கில் போர்நிறுத்தம் இருக்காது,” என்று காட்ஸ் சமூக ஊடகத் தளமான எக்ஸ்-இல் கூறி னார். “ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிராக நாங்கள் எங்கள் முழு பலத்துடன் தொடர்ந்து போராடுவோம், வடக்கு மக்கள் பாதுகாப்பாக தங்கள் வீடுகளுக்குத் திரும்பும் வரை போராடி வெற்றி பெறுவோம்” என்று அவர் கூச்சலிட்டார்.
வியாழக்கிழமை ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றச் சென்ற நேதன்யாகு, செயல்பாட்டுத் திட்டங்களுக்கு ஏற்ப முழு வலிமையுடன் தொ டர்ந்து போராடுமாறு ராணுவத்திற்கு உத்தரவிட்ட தாக அறிக்கை வெளியிட்டார்.
“இது (போர் நிறுத்தம்) பிரதமர் பதிலளிக்காத ஒரு அமெரிக்க-பிரெஞ்சு முன்மொழிவு,” என்று அவரது அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
அந்த அறிக்கை வெளியிடப்பட்ட சிறிது நேரத்தி ற்குப் பிறகு, லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இலக்கு களுக்கு எதிராக புதிய வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
இஸ்ரேலிய ஆளும் கூட்டணியில் இரண்டு தேசியவாத-மத கட்சிகளில் ஒன்றுக்கு தலைமை வகிக்கும் நிதி அமைச்சர் பெசலேல் ஸ்மோட்ரிச், லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு நசுக்கப்பட வேண்டும் என்றும், அதன் சரணடைவு மட்டுமே வெளியேற்றப்பட்டவர்கள் திரும்புவதற்கு வழிவகுக் கும் என்றும் கூறினார்.“21 நாட்களுக்குப் பிறகு போரைத் தொடர திரும்ப ஒழுங்கமைக்கவும், தான் பெற்ற பலத்த அடிகளிலிருந்து மீள்வதற்கும் ஹிஸ் புல்லாவுக்கு நேரம் கொடுக்கக்கூடாது,” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு அமைச்சர் இட்டமார் பென்- க்விர்-இன் தீவிர வலதுசாரிக் கட்சி வியாழக்கிழமை அவசரக் கூட்டம் நடத்த இருந்தது, ஆனால் அக் கட்சியின் உறுப்பினர்கள் ஏற்கனவே போர் நிறுத்த முன்மொழிவுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா மற்றும் பிரான்ஸ், பிற நட்பு நாடு களின் ஆதரவுடன், புதன்கிழமை அன்று இஸ்ரேல் -லெபனான் இடையிலான 21 நாள் போர்நிறுத் தத்திற்கு அழைப்பு விடுத்தன. இந்த போர்நிறுத்தம் இரு தரப்பினர் இடையே சாத்தியமான இராஜ தந்திர தீர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்த அனு மதிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
2006 போருக்குப் பிறகு கடந்த வாரம் லெப னான் மீது இஸ்ரேல் மிக கனரக வான்வழித் தாக்குதல்களைத் தொடுத்துள்ளது. இதில் 600-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பதிலடி யாக ஹிஸ்புல்லா நூற்றுக்கணக்கான ஏவுகணை களை இஸ்ரேல் இலக்குகள் மீது வீசியுள்ளது. முதன்முறையாக இஸ்ரேலின் பொருளாதார மையமான டெல் அவிவ் மீதும் தாக்குதல் நடத்தப் பட்டது. எனினும், இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு, சேதங்களை மட்டுப்படுத்தியுள்ளது.
( ராய்ட்டர்ஸ்)