world

img

தீக்கதிர் உலக செய்திகள்

இறக்குமதி வரியை அதிகரிப்பதாக  டொனால்டு டிரம்ப் மிரட்டல்

ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு மெக்சிகோ, கனடா மற்றும் சீனாவின் இறக்குமதி பொருட்களின் மீது கூடுதல் வரி விதிக்கப்போவதாக டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இம்மூன்று நாடு களில் இருந்தும் அமெரிக்கா அதிக இறக்குமதி செய் யும் நிலையில், சட்ட விரோத குடி யேற்றம் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக வரி விதிப்பதாக காரணம் கூறியுள்ளார். இத னால் எரிவாயு முதல் ஆட்டோமொபைல்கள் பொருட் கள் வரை அனைத்தின் விலையும் பல மடங்கு உயரும்.

1000 மருத்துவப் பணியாளர்களை படுகொலை செய்த இஸ்ரேல்

போர் துவங்கியதில் இருந்து மருத்துவர்கள், செவிலி யர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் என 1000 க்கும் அதிகமான வர்களை இஸ்ரேல் ராணுவம் படுகொலை செய்துள்ளது. மருத்து வப் பணியாளர்கள் கொலை, மருத்துவமனை கள் மீதான குண்டு வீச்சு, ஐ.நா. அவை கொடுக் கும் மருந்துப் பொருட்க ளை காசாவிற்குள் நுழையவிடாமல் தடுப்பது உள்ளிட்ட இஸ்ரேல் ராணுவத்தின் செயல்பாடுகள்  சுகாதாரத் துறை மீதான திட்டமிட்ட தாக்குதல் என காசா செய்தி தொடர்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேதன்யாகுவிற்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்: அலி கொமேனி 

நேதன்யாகுவை கைது செய்ய வேண்டும் என உத்தர விட்டது போதுமானதல்ல, அவருக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என ஈரானின் மதத் தலைவர் அலி கொ மேனி தெரிவித்துள் ளார். தென்னாப் பிரிக்கா சர்வதேச குற்றவியல் நீதிமன்றத் தில் (ஐசிசி) தொடுத்தி ருந்த வழக்கில் நேதன் யாகு மற்றும் அவரது அமைச்சரவையிலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட ராணுவத்துறை அமைச்சர் யோவ் கேலண்ட் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

உக்ரைனுக்காக போரிட்ட  இங்கிலாந்து வீரர் கைது  

ரஷ்யாவிற்கு எதிராக குர்ஸ்க் பிராந்தியத்தில் போரிட்டு வந்த இங்கிலாந்து நாட்டை சேர்ந்த வீரர் ஒரு வரை ரஷ்ய ராணுவம் கைது செய்துள்ளது.  அவர் இங்கிலாந்து ராணு வத்தில் ஏற்கனவே  4 ஆண்டுகள் சிக்னல் பிரிவில் பணியாற்றி வந்த ஜேம்ஸ் ஸ்காட்ஆண் டர்சன்  என தெரிவிக்கப் பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக உக் ரைன் ராணுவத்தில் பயிற்சி அதிகாரியாக இருந்த தாகவும்,அவருடைய விருப்பத்துக்கு எதிராக குர்ஸ்க் பிராந்தி யத்தில் போரிட உக்ரைன்அவரை கட்டாயப்படுத்தி அனுப்பிய தாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

‘சூடான் மக்களுக்கு உதவியை அதிகப்படுத்துக!’

ஐ.நா. நிவாரண அவையின் புதிய தலைவர் டாம் பிளெட்சர் திங்களன்று போரினால் பாதிக்கப்பட்ட சூடானில் உள்ள அதி காரிகளிடம் நிவாரணம் மற்றும் மனிதாபிமானப் பணிகளை  அதிகரிக்கு மாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். உள் நாட்டுப் போரால் பாதிக் கப்பட்டுள்ள சூடானில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 20,000 பேர் இடம்பெயர்ந் துள்ளனர். இதனால் ஒவ்வொருநாளும் அந்நாட்டு மக்களுக்கு உதவி செய்ய வேண்டிய தேவைஅதிகரித்து வருகிறது எனவும் ஐ.நா. அவை குறிப்பிட்டுள்ளது.