ஐ.நா.சபை: இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலால் படுகாயமடைந்த பாலஸ் தீனர்களை ஏற்றிச்சென்ற ஆம்புலன்ஸ் மீது இஸ்ரேல் ராணுவம் குண்டு வீசி 15 நபர்களை படுகொலை செய்ததற்கு ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்ட ரெஸ் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் வான்வெளி தாக்குதலில் படுகாயமடைந்த நபர்களை ரஃபா எல்லை வழியாக எகிப்து மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சித்த போது அந்த ஆம்புலன்ஸ் மீது இஸ்ரேல் ராணுவம் குண்டு வீசி 15 அப்பாவிகளை படுகொலை செய்தது. இதற்கு ஐ.நா. பொதுச் செயலாளர் உட்பட பாலஸ்தீன ரெட் கிரசென்ட் சொசைட்டி, காசா சுகாதார அமைச்சகம்,அல்-ஷிஃபா மருத்துவ மனையின் இயக்குநர் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் 60 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்த தாக்குதலை ஒப்புக்கொண்ட இஸ்ரேல் ராணுவம் எந்த ஒரு ஆதார மும் இல்லாமல் அந்த ஆம்புலன்ஸில் ஹமாஸ் குழுவினர் இருந்ததாக பொய் குற்றச் சாட்டை முன்வைத்து வருகிறது. வழிபாட்டுத்தலங்கள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் மற்றும் அகதிகள் முகாம்கள் மீது நடத்தும் தாக்குதல் களுக்கும் இதே காரணத்தை இஸ்ரேல் ராணுவம் கூறி வருவது குறிப்பிடத் தக்கது.
இந்த தாக்குதல் குறித்து ஐநா பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்ட ரெஸ், எக்ஸ் சமூக ஊடகத்தில், “காசாவில் ஆம்புலன்ஸ் மீது நடத்தப்பட்ட தாக்கு தலை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளேன்” என்றும், “கிட்டத்தட்ட ஒரு மாதமாக, காசாவில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு கொல்லப்படுகின்றனர். அவர்களின் வீடுகள் குண்டுவீசித் தகர்க்கப்பட்டு வருகின்றன. மேலும் அவர்களுக்கான உதவிகள் மறுக்கப்பட்டு வருகின்றன. இது நிறுத்தப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். அல்-ஷிஃபா மருத்துவமனையில் பணிபுரியும் எல்லைகளற்ற மருத்துவ தொண்டு நிறுவனத்தின் (MSF) மருத்துவர்களில் ஒருவர், “நாங்கள் மருத்துவ மனை வாயிலில் நின்று கொண்டிருந்தோம், அப்போது ஆம்புலன்ஸ் நேரடியாக எங்கள் முன் மோதியது. எங்கும் இரத்தம் தோய்ந்த உடல்கள் இருந்தன. சிறுவர்க ளின் கைகளும் கால்களும் உடைந்து உடல்கள் சிதறிக் கிடந்தன” என்று இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலின் கொடூரத்தை விவரித்தார்.