காசா,நவ.19- காசாவில் ஐக்கிய நாடுகள் சபையால் பாலஸ்தீனர்களுக்கான அகதிகள் முகாமாக நடத்தப்பட்டு வரும் அல்-ஃபகூரா மற்றும் வடக்கு காசாவின் தால் அல் ஜாதாரில் உள்ள பள்ளி யின் மீதும் இஸ்ரேல் குண்டுகளை வீசி குழந்தை கள், பெண்கள் என 200 பேரை படுகொலை செய்துள்ளது. இஸ்ரேல் ராணுவம் காசாவின் மீது தாக்கு தலை தொடங்கிய பிறகு மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளுக்கு அடியில் ஹமாஸ் குழுவினர் பதுங்கு குழி கட்டி இருப்பதாக பொய்ப் பிரச்சாரம் செய்து, பொதுமக்களுக்கு பாதுகாப்பாக இருந்து வந்த மருத்துவ மனைகள் மற்றும் பள்ளிகள் மீது குண்டு வீசுவதை நியாயப்படுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக தரை வழித்தாக்கு தலின் போது அல்-ஷிபா மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. மேலும் மருத்து வமனையில் பாதுகாப்பிற்காக தஞ்சம் அடைந்த வர்கள், நோயாளிகள் மற்றும் இஸ்ரேல் தாக்கு தலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர் களை மிரட்டி தெற்கு பகுதிக்கு விரட்டியது. இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்த ஒரு வாரத்திற்குள்ளாகவே, ஜபாலியா அகதிகள் முகாமில் ஐக்கிய நாடு கள் சபையால் பாலஸ்தீன மக்களுக்கு நடத்தப்பட்டு வரும் அல்-ஃபகூரா மற்றும் வடக்கு காசாவின் தால் அல்-ஜாதாரில் உள்ள பள்ளி களில் இஸ்ரேல் விமானங்கள் குண்டுகளை வீசியுள்ளன. அல்-ஃபகூரா பள்ளியில் மட்டும் 50-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இரண்டு பள்ளிகளிலும் நடந்த தாக்குதலில் 200-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர் என்று பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரி வித்துள்ளது. இடிபாடுகளுக்கு அடியில் பலர் சிக்கி இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு தேடி தஞ்சம் அடையும் பகுதிகள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்து வதை ஒரு தொடர் செயல்பாடாக இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்டுள்ளது என தெற்கு காசாவில் பணியாற்றும் ஹனி மஹ்மூத் என்ற பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார். எங்கு பார்த்தாலும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் சடலங்கள் சிதறிக்கிடக்கின்றன. படுகாயமடைந்தவர்கள் உதவிக்காக அல றிக்கொண்டிருந்தனர் என்று இந்த தாக்குதலில் படுகாயமடைந்த அஹ்மத் ரத்வான் என்ற மற்றொரு செய்தியாளர் தெரி வித்துள்ளார். இந்த தாக்குதலுக்கு பிறகு ‘‘தற்காலிக தங்கு மிடங்கள் பாதுகாப்புக்கான இடங்களாகும். பள்ளிகள் கற்றுக்கொள்வதற்கான இடம். வடக்கு காசாவில் உள்ள அல்-ஃபகூரா பள்ளி யில் தங்கியிருந்த குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்கள் கொலைசெய்யப்பட்ட துயரச் செய்தி வந்துள்ளது . பொதுமக்களால் இதை இனியும் தாங்க முடியாது, மனிதநேயம் வளர வேண்டும்” என ஐக்கிய நாடுகள் சபையின் நிவா ரணத் துறை தலைவர் மார்ட்டின் கிரிஃபித்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுவரை 5 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் உட்பட 12,300க்கும் அதிகமான பாலஸ்தீனர்களை இஸ்ரேல் ராணுவம் படுகொலை செய்துள்ளது.