world

img

ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேற இலங்கை மக்கள் மறுப்பு

கொழும்பு,ஜூலை 11-  பெரும்பான்மை இனவாத அரசியலில் மட்டுமே கவனம் செலுத்தி, மக்களின் வாழ் வாதாரத்தையே நாசப்படுத்திய இலங்கை ஆட்சியாளர்களுக்கு எதிராக அந்நாட்டு அனைத்து மக்களும் கொந்தளித்து போராட்ட ங்களை நடத்தி வருகின்றனர். ஜனாதி பதி மாளிகையையும் கைப்பற்றினர். ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே தப்பித் தோம் பிழைத்தோம் என ஓடிவிட்டார்.  தலைநகரம் கொழும்புவை நோக்கி ஆயிரக்கணக்கான மக்கள்  வருகின்றனர்.  ஜூலை 13 ஆம் தேதி பதவி விலக தயார் என  ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே அதி காரப்பூர்வமாக பிரதமர் ரணில் விக்ரம சிங்கேவிற்கு அறிவித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.   ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே வெளியிடும் எல்லாத் தகவல்களும் சபா நாயகர் யாப்பா அபேவர்த்தன மூலமாகவே  வெளியிடப்படும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. உரிய தீர்வு கிடைக்கும் வரை, தாங்கள் ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேறப் போவதில்லை என்று போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

ஜனாதிபதி மாளிகையிலிருந்து  ஊழி யர்கள் வெளியேறினர். ஆனால்  ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவினர் வெளியில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.  காலி முகத் திடலில் நடத்தப்பட்டு வரும் ‘கோட்டா வீட்டுக்குப் போ’  போராட்டம் 94வது நாளாக ஜூலை 11 அன்றும்  நடைபெற்றது.  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீடு தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்தை பதிவு செய்வதற்காக சென்ற ஊடகவியலாளர்கள் 7  பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய காவல் சிறப்பு அதிரடி படையின் அதிகாரி ரொமேஷ் லியனகே தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அனைத்துக்கட்சி  அரசாங்கத்தை அமைப்பதற்கு வழிவகை ஏற்படுத்தும் நோக்கில், அனைத்து அமைச்சர்களும் பதவி  விலக தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்சே தெரி வித்துள்ளார்.  பிரதமர் அலுவலகத்தில் ஜூலை 11 அன்று நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு ஊடகங்களிடம் அவர் கூறுகையில், புதிதாக அமைக்கப்படவுள்ள அனைத்துக் கட்சி அரசாங்கத்திற்கு இடமளிக்கும் நோக்கில், நாம் அனைவரும் பதவிகளை ராஜினாமாசெய்கிறோம். அதேபோன்று, புதிதாக உருவாக்கப்படவுள்ள அனைத்துக் கட்சி அரசாங்கத்திற்கு நாம் ஆதரவை வழங்குவோம்.  ஜனாதிபதி அழைப்பு விடுக்காமல், அதிகாரப்பூர்வமாக அமைச்சரவை  கூட இயலாது. இது நாம் சுயாதீனமாக ஒன்று கூடி, நடத்திய கலந்துரையாடல். நாடாளுமன்றத்தினால் உருவாக்கப்பட வுள்ள அனைத்துக்கட்சி அரசாங்கம் எவ்வாறு அமைக்கப்படவேண்டும், அதன் தன்மை ஆகியன குறித்து, இன்று மாலை  நடைபெறவுள்ள அனைத்து கட்சி  தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்” என விஜேதாஸ ராஜபக்சே தெரிவித்துள் ளார்.

மாளிகைக்குள் கோடிக்கணக்கான பணம்

ஜனாதிபதி மாளிகைக்குள் இருந்து  கோடிக்கணக்கான ரூபாயை பொதுமக்கள் கையகப்படுத்தியுள்ளதாக கொழும்பு காவல்  அதிகாரிக்கு  தகவல் கிடைத்தது. இதையடுத்து கோட்டை காவல்  அதிகாரி உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதி மாளிக்கைக்கு சென்றனர். போராட்டக் காரர்கள் அந்த பணத்தை காவல்துறை யினரிடம் வழங்கினர்.   இதுகுறித்து இன்று நீதிமன்றத்திடம் தெளிவுபடுத்தப்படுகிறது.  சுமார் ஒரு  கோடியே 78 லட்சத்து 50 ஆயிரம் பணம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.