ரஷ்ய கார்கள் போலந்தில் நுழையத் தடை
உக்ரைன்- ரஷ்யா போரால் ரஷ்யாவில் பதிவு செய்யப் பட்ட கார்கள், தங்களின் 27 உறுப்பு நாடுகளின் எல்லைப் பகுதிக்குள் நுழைய ஐரோப்பிய ஒன்றியம் அண்மையில் தடை விதித்திருந்தது. இந்நிலையில் போலந்து ஞாயிற்றுக்கிழமை முதல் தடை உத்தரவை அமல்படுத்தியது.
ஆப்கானிஸ்தானில் 4.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தானின் பைஸாபாத் நகரில் இருந்து 229 கி.மீ. தூரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.நிலநடுக்கத் தின் திறன் 4.5 ரிக்டர் அளவாக பதிவாகியுள்ளது எனவும் இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
புதிய செயற்கைக்கோள் ஏவியது சீனா
சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் யோகன்-39 என்ற தொலை உணர்வு (remote sensing) செயற்கைக் கோளை சிச்சுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச்-2டி கேரியர் ராக்கெட் மூலம் ஏவியது. லாங் மார்ச் ராக்கெட் தொடரில் இது 488 ஆவது பயணமாகும்.
புலம்பெயர்ந்தோர் குறித்து விஷமக் கருத்து
கடந்த மூன்று நாட்களில் 8,500 புலம்பெயர் மக்கள் இத்தாலியில் உள்ள மத்திய தரைக்கடல் தீவான லம்பேடு சாவை அடைந்துள்ளனர்.கடந்த ஒரு ஆண்டாக 1,27,000 மக்கள் புலம்பெயர்ந்து இத்தாலியை அடைந்துள்ளனர். இந்நிலையில் இத்தாலி ஜனாதிபதி ஐரோப்பிய கண்டம் ஆபத்தில் சிக்கி யுள்ளது என்ற விஷமக்கருத்தை கூறியுள்ளார்.
பெண் மீது எச்சில் துப்பிய ஓட்டுநர்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் லண்ட னில் தன் காரில் அமர்ந்திருந்த போது பெண் ஒருவர் காரை நெருங்கி மிகவும் ஊழல் நிறைந்த பாகிஸ்தான் அரசி யல்வாதி என விமர்சித்ததற்கு ஷெரீப்பின் கார் ஓட்டுநர்அப்பெண் மீது எச்சில் துப்பினார். அந்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி நவாஸ் ஷெரீப்பிற்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.