லா பாஸ், ஜன.9- 2022 ஆம் ஆண்டை “ஆணாதிக்க சமுதா யத்தை மட்டுப்படுத்தும் கலாச்சாரப் புரட்சிக்கான ஆண்டு” என்று அனுசரிக்கப்பபோவதாக பொலி வியாவின் இடதுசாரி அரசு அறிவித்துள்ளது. பெண்கள் மீதான வன்முறைக்கு சமுதாய அமைப்பு ஆண்களுக்குச் சாதகமாக இருப்பது காரணமாக இருக்கிறது. இதனால் பாலியல் ரீதியான வன்முறைகள் பெண்களுக்கு எதிராக அதிகரித்துள்ளது. இத்தகையை போக்கை ஒழிப்ப தற்கான நடவடிக்கைகளை முன்னிறுத்தப் போவதாக சிலி அரசு உறுதியளித்துள்ளது. நடப்பாண்டில் அத்தகைய நடவடிக்கைகளை அதிகப்படுத்தவும், கூடுதல் கவனத்தை செலுத்தப் போவதாகவும் அரசு கூறியுள்ளது. இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய சிலி அமைச்சர் மரியா நேலா பிரதா, “அரசி தழில் வெளியிடப்பட்டுள்ள ஆணை எண் 4650ன்படி சில முன்முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. பல அமைப்புகளில் கலாச்சார ரீதி யான மாற்றங்களுக்குத் தேவையான நட வடிக்கைகள் எடுக்கப்படும். பாலியல் ரீதியான வன்முறைகளைக் குறைக்கச் செய்யும் நோக்கில் இவை அமையும்” என்று கூறியுள்ளார்.
குடும்ப வன்முறையால் கடந்த ஆண்டு பாதிக்கப்பட்டவர்கள் பத்து பேரில், 9 பேர் பெண்களாகவே இருந்தனர். இந்தப் புள்ளி விபரங்கள் எங்களை எச்சரிக்கை செய்கின்றன. தொடர் நடவடிக்கைகள் தேவை என்பதை இவை வலியுறுத்துகின்றன. கடந்த ஆண்டில் நீதித்துறை அமைச்சகத்திடம் வந்த புகார்களில் 50 விழுக்காடு பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை கள் தொடர்புடையதாகவே இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. தென் அமெரிக்க நாடுகளில் பொலிவியா வில்தான் பெண்கள் கொலை செய்யப்படு வது அதிகமாக உள்ளது. அதோடு, இங்கு தான் சிறப்பான சட்டப் பாதுகாப்பும் ஏற்படுத்தப் பட்டுள்ளது. இருக்கும் சட்டவிதிகளின்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலே, இந்தப் பிரச்சனையில் பெரும் முன்னேற்றம் கண்டுவிட முடியும். ஆனால் அதைச் செய்ய முடியவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலரான நிட்யா பெசன்டெஸ். கடந்த ஆண்டில் மட்டும் 107 பெண்கள் பொலிவியாவில் கொலை செய்யப்பட்டிருக் கிறார்கள் என்று குற்றங்கள் தொடர்பான அரசு ஆவணம் தெரிவிக்கிறது.