world

img

மியான்மர் விமானப்படை தாக்குதல்

மிசோரம் மாநில மக்கள் - மணிப் பூர் மாநிலத்தின் குக்கி இன மக்  கள் - மியான்மர் நாட்டின் எல்லை  அருகே வசிக்கும் மக் கள் என 3 பழங்குடி யின மக்களும், மூன்று வெவ்வேறு இடங்  களில் வாழ்ந்தாலும் ஒரே இனத்தின் “தொப்  புள் கொடி உறவு கள்” போன்றவர்கள். 

மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி அமைந்தது முதலே இந்திய எல்லை அருகே உள்ள பகுதிகளில் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது அந்நாட்டு விமானப் படை. தாக்குதலில் இருந்து உயிர்பிழைக்க பல்லாயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக மிசோரம், மணிப் பூர் எல்லை கிராமங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். 

மியான்மரில் இருந்து அகதிகளாக நுழையும் பொதுமக்களுக்கு மிசோரம் அரசு அடைக்கலம் தரக் கூடாது என்றும், பயங்கரவாதிகளும் ஊடுருவ வாய்ப்புள்  ளது எனக் கூறி ஒன்றிய பாஜக அரசு அனு மதி மறுத்தது. ஆனால் “எங்கள் தொப்  புள் கொடி உறவுகளை நாங்கள்தான் பாதுகாப்போம்” என ஒன்றிய அரசின் எச்சரிக்கையை தூக்கி எறிந்த பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மிசோ ரம் மாநில அரசு, அகதிகளுக்கு அடைக்க லம் கொடுத்தது.

இந்நிலையில் ஞாயிறு முதல் இந்திய  எல்லைப் பகுதி கிராமங்களில் மியான்மர்  விமானப் படை மீண்டும் திடீரென தாக்கு தல் நடத்தியது. இந்தத் தாக்குதல் களைத் தொடர்ந்து மியான்மர் எல்லை களில் இருந்து 5,000க்கும் அதிகமான பழங்குடியின மக்கள் மிசோரம் மாநி லத்துக்குள் அகதிகளாக தஞ்சம் அடைந்  துள்ளனர். இந்த அகதிகளை மிசோரம்  மாநில அரசு முகாம்களில் தங்க வைத்து  அடிப்படை வசதிகளை வழங்கியுள்ளது. மியான்மர் விமானப்படை தாக்குதலில்  காயமடைந்த 20 பேர் அய்ஸ்வால்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒன்றிய அரசு மவுனம் ஏன்?

இந்திய எல்லைப் பகுதிக்கு மிக அருகே மியான்மர் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட தாக மியான்மர் ராணுவம் தானாக விளக்கம் அளித்துள்ள நிலையில், இந்திய எல்லைப்பகுதிக்கு அருகே  தாக்குதல் நடத்தினாலும் இதுதொடர் பாக இந்திய ராணுவமும், ஒன்றிய அரசும்  எவ்வித விளக்கமும் கேட்கவில்லை.