காபூல்,டிச.27- ஆப்கானிஸ்தானில் அதிகளவிலான பெண்கள் பிரச வத்தின் போது மரணமடைவதாக தெரியவந்துள்ளது.
மேலும் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு பெண் இறப்பதால், பிரசவத்தின் போது பெண்கள் மரணமடையும் மிக மோசமான ஒன்றாக நாடுகளில் ஆப்கானிஸ்தான் உள்ளது என ஐ.நா செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் டிசம்பர் மாத துவக்கத்திலேயே தெரிவித்திருந்தார்.
இந்த இறப்பு விகிதம் ஆப்கானிஸ்தானின் கிராமப்புற பகுதிகளில் மிக அதிகமாக உள்ளது. 1 கோடி பிரசவத்தில் 5,000 தாய்மார்கள் மரணமடைவதாக தெரிவிக்கப்பட்டுள் ளது. தற்போது ஆப்கானிஸ்தானில் பிரசவம் என்பது வாழ்வா, சாவா போராட்டமாக மாறியுள்ளது.