world

img

தீக்கதிர் உலக செய்திகள்

ஸ்வேய்தா நகருக்கு மீண்டும்  ராணுவத்தை அனுப்பும் சிரியா

சிரிய ராணுவத்தை மீண்டும் ஸ்வேய்தா நகரில் நிலைநிறுத்தத் தயாராகி வருகின்றோம் என உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.  இஸ்ரேலின் குண்டு வீச்சுக்கு பிறகு ராணுவத்தை திரும்பப்பெறுவதாக சிரிய அரசு அறிவித்தது. அந்த அறிவிப்பு வெளியான ஒரே நாளில் போர்நிறுத்தத்தை துரூஸ் ஆயுதக்குழு மீறிவிட்டதாகவும் அதனால் மீண்டும் ராணுவத்தை அங்கு நிலை நிறுத்தப் போவதாகவும் சிரிய அரசு அறிவித்துள்ளது. இதனால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

தென்கொரியாவில் கனமழை :  4 பேர் பலி 

இரண்டு நாட்களாக தென் கொரியாவில் பெய்த கனமழையால் நான்கு பேர் பலியாகியுள்ளனர். வெள்ளம் காரணமாக சுமார் 1,300 க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 46 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்நாட்டின் சுங்சியோங் மாகாணத்தின் தெற்குப் பகுதிகளில் புதன்கிழமை முதல் 42 செண்டி மீட்டர் வரை மழை பெய்துள்ளதாக அந்நாட்டு அமைச்சரகம் தெரிவித்துள்ளது.

உக்ரைனின் மூன்று பகுதிகளை  ரஷ்யா கைப்பற்றியது

உக்ரைனின் மூன்று வெவ்வேறு பகுதிகளில் மூன்று கிராமங்களை ரஷ்யா கைப்பற்றியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. ஆனால் உக்ரைன் இதனை ஏற்கவில்லை. ரஷ்யப் படைகள் ஒவ்வொரு நாளும் புதிய கிராமங்களைக் கைப்பற்றியதாக அறிவிக்கிறது. உக்ரைனின் எல்லைக்குள் கிட்டத்தட்ட 20 சதவீத நிலங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. மேலும் உக்ரைனின் டொனெட்ஸ்க், லுகான்ஸ்க், ஜபோரிஷியா, கெர்சன் ஆகிய நான்கு பகுதிகளையும் இணைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

பாலஸ்தீனர்களுக்கான உணவை  அமெரிக்கா அழித்தது

பாலஸ்தீனர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 500 மெட்ரிக் டன் உண வை அமெரிக்கா அழித்துள்ளது. இஸ்ரேல் ராணுவம் காசாவில் உள்ள பாலஸ்தீனர்களுக்கு கொடுக்க வேண்டிய உணவுப்பொருட்களை கொ டுக்கவிடாமல் அவர்களை பட்டினியில் தள்ளிப் படுகொலை செய்கிறது. இதனால் சேமிப்புக் கிடங்குகளில் உள்ள உணவுகள் கெட்டுப்போய் வருகின்றன. இந்நிலையில் மத்திய கிழக்கில் உள்ள ஒரு சேமிப்புக் கிடங்கில் இருந்த 500 டன் உணவுப்பொருட்கள் காலாவதியாகிவிட்டது. அதனை அமெரிக்கா அழித்துள்ளது.

சைபர் குற்றம் : கம்போடியாவில்  1000 பேர் கைது 

கம்போடியா அரசு 5 மாகாணங்களில் 3 நாட்கள் நடத்திய சோதனைகளில் சைபர் குற்றத்தில் ஈடுபட்டதாக 1,000 பேர் கைது செய் யப்பட்டுள்ளனர். கம்போடியா உள்ளிட்ட சில  நாடுகளில் உள்ள மோசடி கும்பல்கள் வேலை யில்லா நிலையை பயன்படுத்தி உலகம் முழுவ தும் பல நாடுகளில் இருந்து இளைஞர்களை ஏமாற்றி வரவைத்து அவர்கள் மூலமாக உலகம் முழுவ தும் சைபர் குற்றத்தை அரங்கேற்றி வருகிறது. இந் நிலையில் அந்நாட்டில் காவல்துறை சோதனை யில் ஆண்கள், பெண்கள் என  270 இந்தோனே சியர்கள் உட்பட 1000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐரோப்பாவில் வெப்ப அலை : பத்து நாட்களில் 2,300 பேர் பலி

பிரஸல்ஸ்,ஜூலை 18- ஐரோப்பிய நாடுகளில் இந்த ஆண்டு முன்ன தாகவே வெப்ப அலைகள் வீசத் துவங்கி விட்டது. ஜூன் மாதத்தின் பிற்பகுதியிலிருந்து ஜூலை மாதத் தின் இரண்டாம் வாரம் வரை வெப்பநிலை சுமார் 46 டிகிரி செல்சியஸ் (114 டிகிரி ஃபாரன்ஹீட்) வரை அதிகரித்துள்ளது. இது ஐரோப்பாவில் வீசிய மூன் றாவது மிக மோசமான வெப்ப அலையாகும். முதல் வெப்ப அலை ஜூன் 17 - 22 க்கு இடை யில் வீசியது. இது மேற்கு மற்றும் தெற்கு ஐரோப் பாவை மிகக் கடுமையாகப் பாதித்தது. இரண்டா வது வெப்ப அலை ஜூன் 30 - ஜூலை 2 க்கு இடை யில் வீசியது. இதனால் பல ஐரோப்பிய நாடுக ளில் 40 டிகிரி  முதல் 46 டிகிரி வரை வெப்பநிலை எட்டியுள்ளது. இம்பீரியல் கல்லூரி லண்டன் மற்றும் லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடி சின் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வின்படி, ஜூன் 23 முதல் ஜூலை 2 வரை பத்து நாட்களில் 12 ஐரோப் பிய நகரங்களில் சுமார் 2,300 பேர் வெப்பம் தொ டர்பான காரணத்தால் பலியாகியுள்ளனர். இதில் சுமார் 1,500 பேர் நேரடி காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய காரணத்தால் பலியாகியுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.  ஸ்பெயினின் சுற்றுச்சூழல் அமைச்சகம், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் அதிக வெப்பத் தின் காரணமாக சுமார் 1,180 பேர் உயிரிழந்துள்ள னர் என்று தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும்போது மிக அதிகமாகும். காலநிலை மாற்றத்தின் தாக்கம் ஒவ்வொரு நாட்டிலும்  தீவிரமாக அதிகரித்து வருகிறது. இது பூமியின் நிலைமையை மிகவும் ஆபத்தானதாக மாற்றுகிறது என்று இம்பீரியல் கல்லூரி பேராசிரி யர் டாக்டர் பென் கிளார்க் தெரிவித்துள்ளார்.  வெப்ப அலைகள் வழக்கமாக ஜூலை மாத பிற் பகுதியிலும் ஆகஸ்ட் மாதத்திலும்தான் நிகழும். ஆனால் சமீப ஆண்டுகாலமாக காலநிலை மாற்றத் த்தின் காரணமாக ஜூன் மாதமே உருவாகிறது. இது மிகவும் ஆபத்தான மாற்றம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.  இந்த வெப்ப அலைகளால் வயதானவர்கள் அதிகமான பாதிப்பை அடைகிறார்கள்.  வெப்ப அலைக்கு பலியானவர்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் 65 வயதுக்கு மேற்பட்டவர்களாக உள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.  கடந்த மாதம் எர்த் சிஸ்டம் சயின்ஸ் டேட்டா என்ற இதழில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் 2015 முதல் 2024 வரை வெப்பமயமாதல் ஒவ்வொரு பத்தாண்டுக்கும் 0.27 டிகிரி செல்சியஸ் என்ற விகி தத்தில் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. இச்சூழலில் முதலாளித்துவத்தின் லாப வெறியின் காரணமாக உருவாக்கப்பட்ட காலநிலை மாற்றம், பூமிக்கு மிகப்பெரிய ஆபத்தை தற்போது உருவாக்கி வருகிறது என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.