world

img

‘சுனிதா வில்லியம்ஸ் அடுத்தாண்டு தான் பூமிக்கு திரும்புவார்’

வாஷிங்டன், ஆக.25 - சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் 2025 ஆம் ஆண்டு தான் பூமிக்கு திரும்புவார் என நாசா அறிவித்துள்ளது.\

2024 ஜூன் 5 அன்று, சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகிய இரு விண்வெளி வீரர்களும்  அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து  போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலனில் கிளம்பி ஜூன் 6 அன்று சர்வதேச விண்வெளி மையத்தை  அடைந்தனர். 

அந்த விண்கலனில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக  சுமார் 80 நாட்களாக அவர்களால் பூமிக்கு திரும்ப முடியவில்லை. இந்நிலையில் ஸ்டார்லைனர் விண்கலனை ஆளில்லாமல் பூமிக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தான் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலனில் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவார் என்ற தகவலை நாசா தெரிவித்துள்ளது.