world

img

தீக்கதிர் உலக செய்திகள்

லித்தியம் உள்ள உக்ரைனின்   பகுதியை கைப்பற்றியது ரஷ்யா

ரஷ்ய ராணுவம் உக்ரைனில் லித்தியம் படிமங்கள் நிறைந்துள்ள பகுதியை கைப்பற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. தொழில் நுட்ப வளர்ச்சிக்கு தேவையான 10 க்கு மேற்பட்ட கனிம வகைகள் உக்ரைனில் உள்ளன.போரில் அமெரிக்கா செய்த உதவிக்கு கைமாறாக உக்ரைன் தனது கனிம வளத்தில் 50 சதவீதத்தை தனக்கு தரவேண்டும் என அமெரிக்கா ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்நிலையில் கனிம வளம் நிறைந்த பகுதிகளை உக்ரைன் ரஷ்யாவிடம் இழந்து வருகிறது. 

இலங்கை நிறுவனத்தின்  பங்குகளை வாங்கும் இந்தியா 

இந்தியாவின் மசகான் கப்பல் கட்டுமான நிறு வனம் இலங்கையின் கொழும்பு கப்பல் துறைமுகத்தின் பங்கை ரூ.442 கோடிகளுக்கு வாங்குகிறது. இந்தியாவின்கடல்சார் ஆதிக்கத்தை விரிவுபடுத்துவதாகவும் இந்தியப் பெருங்கடலில் வளர்ந்துவரும் சீனாவின் செல்வாக்கைத் தடுக்கும் நோக்கத்துடனும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்நிறுவனத்தின் பங்குகளை ஏற்கனவே வாங் கிய ஜப்பான் நிறுவனம் வெளியேறும் நிலையில் பெரும்பான்மை பங்குகளை (51 சதவீதம்) இந்தியா வாங்குகிறது. 

ஈரானிடம் ஜூன் மாதம் அதிக எண்ணெய் வாங்கிய சீனா 

இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்திய ஜூன் 1-20 வரை ஈரானில் இருந்து சீனாவிற்கான எண்ணெய் ஏற்றுமதி ஒரு நாளைக்கு 1.83 மில்லியன் பீப்பாய்கள் அளவிற்கு உயர்ந்துள்ளது.  போர்க் காலத்தில் ஈரானிடம் தள்ளுபடி விலையில் அதிக எண் ணெய் சீனா வாங்கியுள்ளது. போர்க் காலத்தில் ஈரானின் பொருளாதார தேவையை ஈடுகட்ட சீனாவிற்கு குறைந்த விலையில் ஈரான் அதிக அளவு எண்ணெய் ஏற்றுமதி செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. 

போர் நிறுத்தத்தை மதிக்க மாட்டோம் : இஸ்ரேல் அமைச்சர்

ஈரானுடனான போர் நிறுத்தத்தை இஸ்ரேல் மதிக்காது என்று இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரி வித்துள்ளார். மேலும் லெபனானுக்கு செய்வதை போலவே ஈரானுக்கும் செய்வோம் என மிரட்டல் விடுத்துள்ளார். இஸ்ரேல் ராணுவம் லெபனான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அதே போல எங்களுக்கு அச்சுறுத்தலாக கருதி னால் அந்த இடத்தின் மீது தாக்குதல் நடத்து வோம் என அவர் அறிவித்துள்ளார். அதற்கான திட்டத்தை தயாரிக்கவும் ராணுவத்திற்கு உத்தர விட்டுள்ளார்.

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில்  புடின்- ஜி ஜின்பிங் பங்கேற்கவில்லை 

ஜூலை 5-8 வரை பிரேசிலில் நடக்க உள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி புடினும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும் நேரில் கலந்து கொள்ள மாட்டார் கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா சார்பில் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும் சீனா தரப்பில் அந்நாட்டு பிரதமர் லி கியாங் பங்கேற் பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜி ஜின்பிங் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு பிரிக்ஸ் மாநாட்டில் முதல் முறையாக நேரடியாக பங்கேற் பதை தவிர்த்துள்ளார். 

ஆப்பிரிக்க நாடுகளின் பொருட்களுக்கு வரி விலக்கு : சீனா அதிரடி அறிவிப்பு

பெய்ஜிங், ஜூன் 28- 53 ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிகளை முழு மையாக ரத்து செய்ய உள்ளதாக சீனா அறி வித்துள்ளது. இந்த நடவடிக்கை மூலமாக சீன-ஆப்பிரிக்க வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.  சீனாவின் இந்த அறிவிப்பு அமலான பிறகு ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள ஏற்றுமதியாளர்களு க்கு ஏற்றுமதிசார்ந்த புதிய வாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் மாதம் இரண்டாம் வாரம் சீனாவின் ஹுனான் மாகாணத்தில் நடைபெற்ற சீன- ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் (FOCAC) கூட்டத்தில் இது அறிவிக்கப்பட்டது.  இக்கூட்டத்தில் 53 ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க ஒன்றிய ஆணையத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு 2024 பெய்ஜிங் உச்சிமாநாட்டில் முடிவு செய்யப் பட்ட உறுதிமொழிகளின் முன்னேற்றம் குறித்து விவாதித்து மதிப்பீடு செய்தனர். அதனுடன் எதிர் கால ஒத்துழைப்புக்கான திட்டங்களையும் வகுத்தனர். சீனாவின் வரிக் கொள்கை இந்த எதிர்கால ஒத்துழைப்பு திட்டத்தின் அடிப்ப டையில் தான் ஆப்பிரிக்க நாடுகளின் பொருட்க ளுக்கு வரிவிலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி சீனாவுடன் ராஜிய உறவுகளை கடைப்பிடித்து வருகிற அத்தனை ஆப்பிரிக்க நாடு களுக்கும் இந்த சலுகை பொருந்தும். சீனாவுடன் முறையான ராஜிய உறவில் இல்லாததால் இந்த வரிச் சலுகை  ஸ்வாசிலாந்து என்ற ஆப்பிரிக்க நாட்டுக்கு மட்டும் பொருந்தாது.   ஏற்கனவே 33 ஆப்பிரிக்க நாடுகளுக்கு 100 சத வீத வரி விலக்கு அமலில் உள்ளது. எனினும் தற்போதைய அறிவிப்பு ஒட்டுமொத்த ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதாரத்திற்கும் உதவிகரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  கடந்த 15 ஆண்டுகளாக சீனா ஆப்பிரிக்கா வின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாக உள்ளது. 2024 இல் ஆப்பிரிக்கா-சீனாவுக்கு இடை யிலான வர்த்தக அளவு 295.6 பில்லியன் அமெ ரிக்க டாலர்களை எட்டி புதிய சாதனையை படைத் துள்ளது. இதே நேரத்தில் 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மட்டுமே இருதரப்புக்கு இடை யேயான வர்த்தகம் 72.6 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2.7 சதவீதம் அதிகம் ஆகும்.   அமெ ரிக்காவும் பிற மேற்கத்திய நாடுகளும் பாதுகாப்பு வாதக் கொள்கைகள் என்ற பெயரில்   வளரும் நாடுகளின் மீது வரிகள் விதித்து வரும் நிலையில் சீனாவின் இந்த நடவடிக்கை வளரும் நாடுகளுக்கு ஆதரவான விசயமாக மாறியுள்ளது.   சீனாவின் பிற அறிவிப்புகள் ஆப்பிரிக்காவில் இருந்து ஏற்றுமதியாகும் பொ ருட்களின் தரத்தை மேலும் அதிகரிப்பதற்காக வரிச் சலுகை மட்டுமல்லாது மின் உற்பத்தி, செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பப் பயிற்சி, பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு போன்ற முக்கிய துறைகளின் வளர்ச்சிக்கு உதவி செய்யவும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.