world

img

மக்கள் விரோத ஓய்வூதிய முறை சட்டமானது பிரான்சில் மீண்டும் கொந்தளிப்பு

பாரிஸ், ஏப்.15- பிரான்சின் ஓய்வூதியத் திட்டத் திற்கு ஆதரவாக அந்நாட்டின் அரசிய லமைப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தி ருப்பதால் மீண்டும் போராட்டங்கள்  நடக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. பிரான்சில் ஜனாதிபதி இம்மானு வேல் மக்ரோனின் புதிய ஓய்வூதியத் திட்டத்திற்குக் கடும் எதிர்ப்பு இருந்து வருகிறது. அதில் உள்ள இரண்டு அம்சங்களுக்கு அனைத்துத் தரப்பு மக்களிடமிருந்தும் கண்டனங்கள் கிளம்பியுள்ளன. ஓய்வு பெறும் வயதை 62இல் இருந்து 64ஆக உயர்த்துவது மற்றும் ஓய்வூதியம் பெற 43 ஆண்டுகள் ஊதியத்தில்  இருந்து ஓய்வூதியப் பங்களிப்பு செலுத்தியிருக்க வேண்டும் என்ற இரண்டு அம்சங்கள் ஓய்வூதி யத்தைப் பறிப்பதற்கான விதிகளே என்ற கருத்து நாடு முழுவதும் நிலவு கிறது. பல்வேறு கருத்துக் கணிப்புகள், பெரும்பாலான மக்கள் இந்தப் புதிய திட்டத்தை ஏற்கவில்லை என்றே தெரி விக்கின்றன. ஆனால், ஜனாதிபதி மக்ரோன் மற்றும் பிரதமர் எலிசபெத் போர்ன் ஆகியோர் புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பிடிவாத மாக இருக்கிறார்கள். இந்நிலையில் அரசியலமைப்பு நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.

புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு ஆதரவாக அந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது. மக்கள் மத்தியில் இந்தத் தீர்ப்பு கொந்தளிப்பை ஏற்படுத்தியி ருக்கிறது. தீர்ப்பு வெளிவந்து கொண்டி ருந்த வேளையில், தலைநகர் பாரிசின் நகர்மன்றக் கூடத்தின்  முன்பாக, “சூழல் கோபமயமாக உள்ளது” என்றும், “புதிய ஓய்வூதி யத் திட்டம் திரும்பப் பெறாத வரையில் போராட்டங்கள் ஓயாது” என்றும் எழுதப்பட்ட பதாகைக ளுடன் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அரசியலமைப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு, புதிய திட்டத்திற்கு சாதகமாக வந்தாலும், மக்களின் எதிர்ப்பு ஓயாது என்பதையே இந்தப் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் எடுத்துக் காட்டியது. “இங்கே நாங்கள்.. இங்கே நாங்கள்... மக்ரோன் விரும்பாவிட்டா லும் இங்கே நாங்கள்..” என்ற பாடல் அனைத்துப் போராட்டங்களிலும் மக்களால் பாடப்பட்டு வருகிறது. கோடிக்கணக்கான மக்கள் இந்தப் பாடலை பதிவிறக்கம் செய்திருக் கிறார்கள். “மக்களின் கோபத்தைக் கவனித்து, அதைப் புரிந்து கொள்ளுங்கள். நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்ப தைப் பாருங்கள். சட்டத்தை நடை முறைப்படுத்தாதீர்கள். மக்களின் கோபத்தைத் தணிக்க இதுதான் ஒரே வழியாகும்” என்று ஜனாதிபதியை யும், அரசையும் ஒரு கூட்டறிக்கை யின் வாயிலாக அனைத்துத் தொழிற் சங்கங்களும் வலியுறுத்தியுள்ளன.