world

img

ஜனநாயகத்திற்கு திரும்புங்கள் : நைஜருக்கு ஆப்பிரிக்க நாடுகள் எச்சரிக்கை

அபுஜா, ஜூலை 31- ராணுவ ஆட்சி ஏற்பட்டுள்ள நைஜர் நாட்டில் ஜனநாயகத்தை மீண்டும்  கொண்டு வருவதற்கான நடவடிக்கை களை எடுக்குமாறு ஆப்பிரிக்க நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜருக்கு ராணுவ ஆட்சி என்பது ஒன்றும் புதியது கிடையாது. ஆப்பிரிக்கா வின் சஹேல் பகுதியில் உள்ள இந்த நாட்டில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் ஏழு முறை கலகம் நடந்திருக்கிறது. கடந்த வாரத்தில் திடீரென்று ஜனாதிபதி மாளிகையில் இருக்கும் பாதுகாப்புப் படையினர் அவரைக் கைது செய்து பாதுகாப்பில் வைத்திருக்கிறார்கள். அந்தப் படையினரின் தலைவரான ஜெனரல் அப்துர்ரஹமானே தன்னைத் தானே ஆட்சியாளராக அறிவித்துக் கொண்டார். இந்த ஆட்சி மாற்றத்தை சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளவில்லை. குறிப்பாக, மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதாரக் கூட்டமைப்பு, நைஜரில் ஜனநாயகத்தை மீண்டும் கொண்டு வருமாறு ராணுவ ஆட்சியாளர்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறது.  15 நாடுகள் கொண்ட இந்த கூட்டமைப்பு எச்சரிக்கையும் விடுத்திருக்கின்றது. ஜன நாயகத்தை மீண்டும் கொண்டு வரு வதற்கான பணிகள் நடக்கவில்லை என்றால், நடவடிக்கைகளைச் சந்தி க்க வேண்டியது வரும் என்று ராணுவ ஆட்சியாளர்களை எச்சரித்திருக்கிறார்கள். தேவைப்பட்டால் ராணுவ நடவடிக்கையே எடுப்போம் என்றும் தெரிவித்துள்ளனர்.