அபூ தாபி,நவ.28- ஐக்கிய நாடுகளின் 28ஆவது கால நிலை மாநாடு மத்திய கிழக்கு நாடான அரபு அமீரகத்தின் புகழ்பெற்ற நகர மான துபாயில் நவம்பர் 30 துவங்கி டிசம்பர் 12 வரை நடைபெற உள்ளது.
காலநிலை மாற்றத்தைக் கட்டுப் படுத்துவதற்கும்,அதற்கான வழிகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கவும் உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.
முதல் 10 நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகமும் ஒன்றாக உள்ளது. புதை படிவ எரிபொருளான எண்ணெய் கால நிலை மாற்றத்தில் பெரும் பங்கு வகிப்ப தால் தொழிற் புரட்சிக்கு பிறகு மிக அதிக மாக புவியின் வெப்பநிலை உயர்ந்துள் ளது.வெப்ப அலைகளின் பாதிப்பால் சர்வசாதாரணமாக உயிரிழப்புகள் ஏற்படும் நிலை உலகளவில் அதிகரித்து வருகிறது.
இவற்றுடன் அரபு அமீரகமும் வெப்பமான மற்றும் ஈரப்பதமான கால நிலை காரணமாக காலநிலை பாதிப்பு களை அதிகம் எதிர்கொள்ளும் நாடுகளில் ஒன்றாக உள்ளது.கார்பன் உமிழ்வைக் குறைக்கவில்லை என்றால், 2070 களில் அரபு நாடுகளின் பகுதிகளில் வெப்ப நிலை 35 ° C (95 ° F) ஐ தாண்டும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த 28 ஆவது காலநிலை மாற்ற மாநாடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரிம மற்றும் ஹைட்ரோபோனிக் விவசாயத்தை ஊக்குவித்தல், கழிவுக ளைக் குறைப்பது என நாட்டின் பல்வேறு பொருளாதாரத் துறைகளில் பல்வேறு வழிகளில் உமிழ்வைக் குறைக்க அமீர கம் முயற்சிகளை மேற்கொண்டு வரு கிறது.2050 ஆண்டுக்குள் மத்திய கிழக்கு நாடுகளும் கார்பன் உமிழ்வை பூஜ்ஜியமாக மாற்ற உறுதியளித்துள் ளது.குறிப்பாக பாரிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முதல் அரபு நாடே அரபு அமீரகமாக உள்ளது.
மாநாட்டு அறிக்கைகளின்படி, இந்த ஆண்டு காலநிலை மாற்றத்தைத் தடுக்க உலக நாடுகளின் கூட்டு நடவடிக்கை யின் முக்கியத்துவத்தையும் குறைந்த கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்தி கால நிலை மாற்றத்தை தடுக்க வளர்ந்த நாடு கள் வளரும் நாடுகளுக்கு நிதி அளிக்க வேண்டியதன் முக்கிய பங்கையும் வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படு கிறது.