திருப்பூர், நவ. 12 - திருப்பூரில் டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக, சுகாதாரமற்ற முறையில் இருந்த பிளீச்சிங் ஆலைக்கு ரூ.1லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அரசு உத்தரவை அலட்சியப்படுத்திய அந்த ஆலையை கையகப்படுத்த வருவாய்த் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டதை தொடர்ந்து ஆலை நிர்வாகம் ரூ.1லட்சம் அபராதம் செலுத் தியதுடன், தூய்மைப் பணியும் மேற்கொண்டனர். இது பற்றிய விபரம் வருமாறு: திருப்பூர் மாநகரை ஒட்டிய பகுதியான முதலிபாளையம் சிட்கோ. இங்கு கொல்கத்தா, பீகார், ஒடிசா, உத்தரபிரதேசம், மகாராஷ்டி ரம் மற்றும் அசாம் உட்பட பல்வேறு வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் சுமார் 8000 பேர் வரை தங்கி பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றி வருகின்ற னர். இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக டெங்கு காய்ச்சலின் தாக்கம் இப்பகுதியில் அதிக அளவில் பரவி வரு கிறது. வடமாநிலத் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் போதிய விழிப்புணர்வு மற்றும் சுகாதாரம் இல்லாத நிலையில் டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு, திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து பொது சுகாதாரத்துறையினர், மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையினர் அப்பகுதியில் தொடர் ஆய்வு மேற்கொண்டு சுகாதாரமற்ற முறையில் கொசுப்புழுக்களை அதிக அள வில் உற்பத்தி செய்யும் பின்னலாடை உற்பத்தி நிறுவ னங்களுக்கு அபராதம் விதித்தனர். அதன் ஒரு பகுதியாக முதலிபாளையம் ஊராட்சியில் டெங்கு கொசு ஒழிக்கும் பணி குறித்து ஊரக வளர்ச்சித் துறையினர் மற்றும் சுகாதாரத் துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சாமிநாதன் என்பவருக்கு சொந்தமான நோக்கா பிளீச்சர்ஸ் என்ற சலவை பட்ட றையில் உள்ள 8 தொட்டிகளில் மழைநீர் தேங்கி இருந்ததால் பல லட்சம் எண்ணிக்கையிலான கொசுப்புழுக்கள் உற்பத்தி ஆகியிருப்பதைக் கண்டு அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்த னர். இதையடுத்து அந்த சலவை பட்டறையை 24 மணி நேரமும் சுத்தம் செய்யுமாறும், ரூ. 1லட்சம் அபராதம் விதித்தும் உத்தரவிடப்பட்டது. ஆனால் இதனை அந்த நிர்வாகத்தார் பொருட்படுத்தவில்லை. இதையடுத்து ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் கவ னத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆட்சியரின் உத்த ரவுப்படி, தனியார் சலவை பட்டறையை வருவாய்த்துறை சட்டப்படி கையகப்படுத்த முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து சலவை பட்டறை உரிமையாளர் சாமிநாதன் முதலிபாளையம் ஊராட்சியில் ரூ. 1லட்சம் அபராதம் செலுத் தினார். மேலும் மூடி வைக்காமல் உள்ள சலவை பட்டறை தொட்டிகளுக்கு மூடி போட்டு விடுவதாகவும், ஒரு நாள் அவகாசம் வழங்குமாறும் கோரினார். இதையடுத்து திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் மகேஸ்வரன் மற்றும் வட்ட வளர்ச்சி அலுவலர் வி.பி.கனகராஜ் தலைமையில் மழைநீர் தேங்கியுள்ள அனைத்து தொட்டிகளிலும் மழை நீர் வெளியேற்றம் செய்ய உத்தரவிட்டனர். அதன்படி மழைநீர் வெளியேற்றப்பட்டு, பிளீச்சிங் பவுடர் தெளிக்கப் பட்டு சுத்திகரிப்புப் பணி செய்யப்பட்டது.