நச்சுயிரி வல்லுநர் டி.ஜேக்கப் ஜான் பேட்டி
சென்னை, மே 10- கொரோனா இந்தியாவில் சமூகப்பரவலாகிவிட்டது. இதை அரசாங்கம் ஒப்புக்கொண்டு தனிப்பட்ட பாதுகாப்பு நட வடிக்கைகளை எடுக்க வேண்டு மென வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரியின் முன்னாள் நச்சுயிரி வல்லுநர் டி.ஜாகேப் ஜான் கூறியுள்ளார். அவர் ஆங்கில நாளி தழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியி லிருந்து சில பகுதிகள்:-
மத்திய அரசு மற்றும் ஐ.சி.எம்.ஆர் ஆகியவை சமூகப் பரவல் பிரச்சனையைத் தொடர்ந்து தவிர்க்கின்றன. உங்கள் பார்வை என்ன? இந்தியாவில் சமூக பரவல் எப்போது தொடங்கியது?
எனது பார்வையில், மார்ச் 18 அன்று தமிழகத்தில் கொரோ னா தொற்று கண்டறியப்பட்டது. தில்லியில் இருந்து 20 வயது இளைஞர் ரயில் பயணம் மேற் கொண்டார். பாதிக்கப்பட்ட எந்த வொரு நபருடனும் அவருக்கு எந்தத் தொடர்பும் இல்லை. அவர் சென்னைக்கு வந்தபின் தொற்று அறிகுறி அவருக்கு இருப்பது தெரியவந்துள்ளது.
மார்ச் 19-ஆம் தேதி கொல் கத்தாவில் 52 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்தார். அவருக்கு நடத்திய சோதனையில் கொரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரது குடும்பத்தினருக்கு எந்தப் பயண வரலாறோ, தொடர்பு வரலாறோ இல்லை. சமூகப் பரவலுக்கு மற் றொரு எடுத்துக்காட்டு இந்தச் சம்பவம்.
இது போன்று பல்வேறு நிகழ்வுகள் உள்ளன. ஒரு பார்வை யாளராக அது எனக்குத் தெரி யும். சமூகப் பரவல் தவிர்க்க முடியாதது. சமூகம் பரவலை அரசாங்கம் ஒப்புக் கொள்ள வேண்டும். பொருத்தமான தனிப் பட்ட பாதுகாப்பு நடவடிக்கை களை கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.