what-they-told

img

உள்ளாட்சித்துறை சர்வே: பொதுமக்கள் கருத்து

சென்னை,மே 7- கொரோனா தொற்று பரவலை தனிநபர் இடைவெளி, முகக்கவசம் அணிவதன் மூலமா கவே கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தடுப்புபணிகள் குறித்து  பொதுமக்களிடம் அமைச்சர் எஸ்.பி. வேல்மணி தலைமையிலான ஊரக வளர்ச்சி நகர்ப்புற மேம்பாட்டுத்துறை வலைத்தளம் வாயிலாக ஆய்வு  நடத்தியது. இதில் பங்கேற்ற 674 பேர் நோய்த்தொற்றை தடுக்க ஊரடங்கு உத்தரவு பயன்பட்டாலும் ஒவ்வொருவரும் வீடுகளிலும் அத்தி யாவசிய பொருட்களை வாங்க வெளியே சென்றா லும் அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றவேண்டும் என்று கூறியுள்ளனர்.  மார்ச் 25 ஆம்தேதிக்கு பின்னர் முழு ஊரடங்கு அமல்படுததப்பட்ட பின்னர் அரசு எடுத்த நடவ டிக்கைகள் குறித்தும் ஆக்கப்பூர்வமான கருத்துக் களை தெரிவித்துள்ளதாக உள்ளாட்சித்துறையின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.