what-they-told

img

வீடு தேடி வரும் மருந்துகள் புதிய சேவை அறிமுகம்


சென்னை, ஏப்.14-

தமிழகத்தில் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று மருந்துகளை வழங்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத் தப்பட்டுள்ளது. அதன்படி, அதற்கென வெளியிடப் பட்டுள்ள கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு மருந்துகளை வீட்டிலிருந்தபடியே ஆர்டர் செய்து கொள்ளலாம்.

 இந்தத் திட்டத்தை சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சென்னையில் தொடங்கிவைத்தார்.  தமிழகத்தில் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் அந்த சேவை நடைமுறைப்படுத் தப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன் மூலம் மருந்து தேவைகளுக்காகக் கூட மக்கள் வெளியே வர அவசியம் ஏற்படாது என்றும் அவர்கள் கூறினர்.

;