what-they-told

img

சென்னை - அந்தமான் கப்பல் சேவை  மீண்டும் தொடங்கியது

சென்னை:
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடந்த 53 நாள்களாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த பயணிகள் கப்பல் போக்குவரத்துச் சேவை, மீண்டும் தொடங்கியது.கொரோனா தொற்றுப் பரவல் காரண மாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த 52 நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது பயணிகள் கப்பல் போக்குவரத்துச் சேவை சென்னையில் மீண்டும் தொடங்கியுள்ளது.

அதன்படி, எம்வி நான்கவுரி என்னும் கப்பல், சென்னை துறைமுகத்திலிருந்து 87 பயணிகளுடன் அந்தமான் தீவுகளுக்கு  புறப்பட்டுச் சென்றது. பயணத்திற்குமுன் பயணிகளிடம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பயணிகளுக்காகச் சென்னை துறைமுக வாயிலில் பலத்த பாதுகாப்புடன் காத்திருப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

தொடர்ந்து பயணிகள் அனைவரும் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து, அங்கிருந்து மாநகரப் பேருந்துகளில் 20 பயணிகள் வீதம் கப்பல் நிற்கும் தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.அங்கு அவர்களது உடைமைகள் தூய்மைப்படுத்தப்பட்டு, தொடர்ந்து உடல் வெப்ப நிலைமானிகள் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, கப்பலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.சென்னை மாநகராட்சி சார்பில் அவர்களுக்கு தண்ணீர் பாட்டில்கள், மதிய உணவு உள்ளிட்ட உணவுப் பொருள்கள் வழங்கப் பட்டதைத் தொடர்ந்து, பயணிகளின் பாதுகாப்பை சென்னை துறைமுக சுகாதார அலுவலர்கள், சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு அரசு அலுவலர்கள் உறுதிசெய்து கப்பலை வழி அனுப்பி வைத்தனர்.

;