tamilnadu

img

இன்சூரன்ஸ் சட்டத்திருத்த மசோதாவை கைவிட வலியுறுத்தல்

இன்சூரன்ஸ் சட்டத்திருத்த மசோதாவை கைவிட வலியுறுத்தல்

கோவை, ஜூன் 29- தனியார் இன்சூரன்ஸ் நிறுவ னங்களுக்கு ஆதரவாக ஒன்றிய  அரசு முன்மொழிய உத்தேசித் துள்ள இன்சூரன்ஸ் சட்டத்திருத்த மசோதாவை கைவிட வேண்டும், என இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இன்சூரன்ஸ் கார்ப்பரேசன் ஊழியர் சங்கத்தின் கோவைப் பகுதி 66 ஆவது ஆண்டு மாநாடு,  கோவை மாவட்டம், மசக்காளி பாளையம் சாலையிலுள்ள ஹர்ஷா மஹாலில் ஞாயிறன்று நடைபெற்றது. சங்கத்தின் தலை வர் பி.வி.குமார் தலைமை வகித் தார். சங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் ஸ்ரீகாந்த் மிஸ்ரா துவக்கவுரையாற்றினார். அகில இந்திய இணைச் செயலா ளர் எம்.கிரிஜா, தென்மண்டல இன் ்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத்தலைவர் சி.முத்துகுமார சுவாமி, பொருளாளர் எஸ்.சிவசுப் பிரமணியன், இணைச்செயலாளர் வி.சுரேஷ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இம்மாநாட்டில், இந்திய அரசி யலமைப்புச் சட்டத்தை பாது காக்க வேண்டும். அப்பாவி பாலஸ்தீன மக்களை, பெண்களை,  குழந்தைகளை கொன்று குவிக்கும் இஸ்ரேலின் போர்வெறியை கண் டித்தும், உடனடியாக போரை  நிறுத்த வேண்டும். பெருமுதலாளி களுக்கு ஆதரவாக தொழிலாளர்  நலச்சட்டங்களை திருத்தியதை திரும்பப்பெற வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க முயல்வதை கைவிட வேண் டும். தனியார் இன்சூரன்ஸ் நிறு வனங்களுக்கு ஆதரவாக ஒன்றிய  அரசு முன்மொழிய உத்தேசித் துள்ள இன்சூரன்ஸ் சட்டத்தி ருத்த மசோதாவை கைவிட வேண் டும். எல்ஐசி நிறுவனத்தை பொதுத் துறையாக பாதுகாத்து, அதன்  வணிகத்தை உயர்த்த வேண்டும்.  நான்கு பொதுத்துறை பொதுக் காப்பீட்டு நிறுவனங்களையும் ஒன்றாக இணைத்திட வேண்டும். ஜூலை 9 ஆம் தேதிய நாடுதழுவிய பொதுவேலைநிறுத்தத்தினை மாபெரும் வெற்றியாக்கிட வேண் டும். நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிராக நடைபெறும் அனைத்து விதமான வன்கொடுமைகளை தடுத்து, குற் றவாளிகளுக்கும் கடும் தண் டனை வழங்க வேண்டும். தமிழக  அரசு மதக்கலவரங்களை தூண்ட  முயற்சிக்கும் மதவெறி சக்தி களை தனிமைப்படுத்திடும் நடவ டிக்கைகளை எடுக்க வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத் தின் தலைவராக பி.வி.குமார்,  பொதுச்செயலாளராக கே.துளசித ரன், பொருளாளராக பி.சாமிநா தன் மற்றும் 10 பேர் கொண்ட கோவை பகுதி நிர்வாகக்குழு தேர்வு செய்யப்பட்டது. முன்ன தாக, எல்ஐசியிலிருந்து பணிஓய்வு பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இம்மாநாட்டில், கோவை, திருப்பூர், ஈரோடு மற் றும் நீலகிரி மாவட்ட எல்.ஐ.சி அலு வலகங்களில் பணியாற்றும் 200 மக ளிர் ஊழியர் உட்பட 400க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர். முடி வில், கே.துளசிதரன் நன்றி கூறி னார்.