மாதர் சங்க இடைக்கமிட்டி மாநாடு
சேலம், ஜூன் 29- மாதர் சங்கத்தின் பனமரத்துப்பட்டி வட் டப் பேரவை மற்றும் சேலம் கிழக்கு மாநகர மாநாடு ஞாயிறன்று நடைபெற்றன. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தின் சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி வட்ட 3 ஆவது பேரவை, வட்ட துணைத்தலைவர் காளியம்மாள் தலைமையில் ஞாயிறன்று நடைபெற்றது. பூங்கொடி வரவேற்றார். மாவட்ட துணைத்தலைவர் கே.ராஜாத்தி துவக்கவுரையாற்றினார். செயலாளர் தன சுதா அறிக்கையை முன்வைத்தார். மாநிலக் குழு உறுப்பினர் ஐ.ஞானசௌந்தரி சிறப் புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் எஸ். எம்.தேவி வாழ்த்திப் பேசினார். இக்கூட்டத் தில், 100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக உயர்த்த வேண்டும். சந்தியூர், ஆட் டையாம்பட்டி பகுதியில் உள்ள அரசுப்பள்ளி களில் குடிநீர் வசதி ஏற்படுத்தித்தர வேண் டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் வட் டத் தலைவராக மேகலா, செயலாளராக தன சுதா, பொருளாளராக காளியம்மாள் உட்பட 9 பேர் கொண்ட இடைக்கமிட்டி தேர்வு செய் யப்பட்டது. மாவட்டத் தலைவர் ஆர்.வைர மணி நிறைவுரையாற்றினார். இதேபோன்று, மாதர் சங்க சேலம் கிழக்கு மாநகர 8 ஆவது மாநாடு, ஞாயிறன்று நடை பெற்றது. இதில் சங்கத்தின் தலைவராக ஆர். வைரமணி, செயலாளராக பி.தேவி, பொரு ளாளராக எஸ்.தமிழ்செல்வி, உதவித்தலை வர்களாக பி.பொன்னழகு, ஆர்.கவிதா, உதவிச்செயலாளர்களாக எஸ்.நாகதேவி, டி. சாவித்திரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட னர். இதில் மாநிலக்குழு உறுப்பினர் ஐ. ஞானசௌந்தரி, மாவட்டப் பொருளாளர் கே. பெருமா, உதவித்தலைவர் எஸ்.கவிதா உட் பட பலர் கலந்து கொண்டனர்.