தூத்துக்குடி,மே 28- தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறை முகம் 72.40 மீட்டர் நீளம் கொண்ட மிகப் பெரிய காற்றாலை இறகினை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது. ஜெர்மன் நாட்டு கொடியுடன் எம்.வி. மரியா என்ற இக்கப்பல் 151.67 மீட்டர் நீளமும் 8.50 மீட்டர் மிதவை ஆழமும் கொண்டது. இக்கப்பல் 26 ம் தேதி மதியம் 1.24 மணியளவில் வ.உ.சிதம்பர னார் துறைமுகத்தின் வ.உ.சி. கப்பல் சரக்குதளம் 3-ஐ வந்தடைந்தது.72.40 மீட்டர் நீளமுடைய காற்றாலை இற கினை இக்கப்பலின் 3 ஹைட்ராலிக் பளுத்தூக்கி இயந்திரங்கள் மூலம் கையாளப்பட்டது. இக்கப்பலின் ஏற்றுமதியாளர்கள் திருவள்ளுரிலுள்ள நோர்டிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆவர். மேலும் ஜெர்மனியிலுள்ள நோர்டிக்ஸ் ஏனர்ஜி புஆடீர் என்ற நிறுவ னத்திற்காக பெல்ஜியத்திலுள்ள ஆன் டேர்ப் துறைமுகத்திற்கு இக்கப்பலின் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இக்கப்பலின் சரக்கு கையாளுபவர்கள் மற்றும் கப்பல் முகவர்கள் ஆஸ்பின் வால் அன் கோ, தூத்துக் குடி ஆவர். இந்த காற்றாலை இறகினை சென்னை அருகாமையி லுள்ள மாப்பேடு என்ற இடத்திலிருந்து வ.உ.சிதம்பரனார் துறை முகம் வரை பிரத்தியேக லாரிகள் மூலம் நாமக்கல் டிரான்ஸ்போர்ட் கேரியர் லாஜிஸ்டி க்ஸ் பிரைவேட் லிமிடெட் எடுத்து வந்தார்கள்.
வ.உ.சிதம்பரனார் துறை முக பொறுப்புக் கழகத் தலைவர் ராமச்சந்திரன், காற்றாலை உதிரி பாகங்களை கையாளுவதற்கு தேவை யான அனைத்து உள்கட்டமைப்பு இட வசதிகளும் துறைமுகத்தில் அமையப் பெற்றுள்ளது என்று கூறினார். மேலும் சாகர்மாலா திட்டத்தின்கீழ் வ.உ.சிதம்பர னார் துறைமுக நிலங்களில் தொழிற் சாலைகள் துவங்குவதற்காக டீயூட்டி குரின் ஸ்பீட்ஸ் என்ற திட்டத்தின் மூலம் தொழிற்பூங்கா அமைப்பதற்கு தேவை யான 1000 ஏக்கர் பரப்பளவு நிலத்தினை ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தொழிற் சாலைகள் உருவாவதற்கு தேவையான அனைத்து வசதிகள் இடம்பெறுவது மட்டுமல்லாமல் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்ட பொருட்களை குறைந்த போக்குவரத்து செலவில் உலக சந்தை யில் விநியோகம் செய்யலாம் என்று கூறினார்.