புதுதில்லி,பிப்.26- கொரோனா தொற்றால் பெற் றோர்களை இழந்து 19 லட்சம் குழந்தைகள் பரிதவித்து வருகின்றனர். 2020 மார்ச் மாதத்தில் இருந்து அக்டோபர் 2021 வரை இந்தியா வில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது. இந்தியாவில் கொரோனா வால் இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பால் 19.2 லட்சம் குழந்தைகள் தங்கள் பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ இழந்துள்ளனர். உலகிலேயே கொரோனா தொற்று பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் எண்ணிக்கை இந்தி யாவில்தான் அதிகம் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் குறித்து 20 நாடுகளில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. ஜெர்மனியில் குறைந்த அளவாக 2,400 குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்துள்ளன. பெரு நாட்டில் 1000 குழந்தைகளுக்கு 8.3 என்ற அளவிலும் தென்னாப்பிரிக்கா வில் 1000 குழந்தைகளுக்கு 7.2 என்ற அளவிலும் பெற்றோரை இழந்துள்ள னர். உலக அளவில் 33 லட்சம் குழந் தைகள் தங்கள் பெற்றோரில் ஒரு வரை இழந்துள்ளனர். இங்கிலாந் தில் இருந்து வெளியாகும் மருத்துவ இதழான ‘லான்செட்’ பத்திரிகையில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகி யுள்ளன.