what-they-told

img

‘பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் விஞ்ஞானப்பூர்வமானது’

அனைத்து வகையான பொருட்களின் அனைத்து வடிவங்களும், உறவுகளும் மாற்றத்திற்கு உட்பட்டவை. ஒவ்வொன்றிலும் உள்ள எதிர்மறை சக்திகள் முரண்பாடுகளாக வெளிவருகின்றன. பழையதை தூக்கி எறிந்து, புதியதை உருவாக்கி முரண்பாடுகளை தீர்க்க முடியும். தீர்க்கப்பட வேண்டிய புதிய முரண்பாடு உருவாகும். பொருள்முதல் உலகில் தோன்றும் புதிய வளர்ச்சிகள் , மற்றும் மனித உழைப்புடன் தொழில்நுட்ப வளர்ச்சியும், திறமைகளும் கருவிகளாகி, புதிய நிலைமைகளை உருவாக்குகின்றன. அவற்றைச் சார்ந்தே ஒரு சமுதாயத்தில் உற்பத்தி சக்திகள் அமைகின்றன. ஆனால் அதே சமயம் அவை சமுதாயத்தை பல வர்க்கங்களாக பிளவுபடுத்தி , உற்பத்தியை அபகரித்துக் கொள்ள போராடும் நிலையை தோற்றுவிக்கிறது. அபகரிப்பு என்ற நிலை வர்க்க போராட்டத்திற்கு இட்டுச் செல்வதுடன் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

வரலாற்றில் உற்பத்தி சக்திகள் தொடர்ச்சியாக வளர்ச்சி அடைகின்றன. புதிய சுரண்டல் உறவுகள் ஏற்படுகின்றன. அவற்றுடன் வர்க்கங்கள் இணைகின்றன. இவை முன்னுக்கு வரும் பொழுது, வளர்ச்சியின் தேவைகளை ஒட்டி, சிலவற்றை தூக்கி எறிய வேண்டி வரும். இந்த செயல்முறையில் புதிய திறம் வாய்ந்த தொழில் நுட்ப வடிவங்கள், திறமைகள் புதிய போராட்டங்கள் வருவதை நாம் காண முடியும். அடிமைச் சமூகம், நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம், கம்யூனிசம் என்கின்ற சமுதாயத்தின் முக்கியமான நான்கு கட்ட வளர்ச்சியில் இது தொடர்கிறது. சோசலிசத்திற்கான மாற்றம் ஏற்படும் பொழுது, மூலதன சர்வாதிகாரம் தூக்கி எறியப்பட்டு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அமைகிறது. இதில், பாட்டாளி வர்க்கம், முதலாளித்துவ வர்க்கத்தை தூக்கி எறிந்து உற்பத்தி சாதனங்களை கைப்பற்றுகிறது. அந்த வர்க்கம் பல நூற்றாண்டுகளாக, மற்றவர்களுக்கு செல்வத்தை உற்பத்தி செய்து கொடுத்துள்ளது. உற்பத்தியை தங்கள் வசம் கொண்டு வந்தவுடன், சுரண்டலுக்கும், அதோடு தொடர்புடைய வர்க்கப் போராட்டத்திற்கும் முடிவு கட்டுகிறது.

தோழர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித்
மறைந்த முன்னாள் பொதுச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

இன்று தோழர் சுர்ஜித் நினைவு நாள்