what-they-told

img

சோமு-செம்புவிற்கு மரணமில்லை..!

முன்னெடுப்பதில் மாணவர் இயக்கத்தின் கல்விக்கான போராட்டத்தின் பங்கு அளப்பரியது. அத்தகைய போராட்ட வரலாற்றின் மணிமகுடம்தான் தோழர்கள் சோமுவும் செம்புவும். 1980 காலகட்டத்தில் பொறியியல் படிப்பு என்பது அவ்வளவு எளிதான தல்ல. தூத்துக்குடி மாவட்டம். துரை சாமிபுரத்தைச் சேர்ந்த சோம சுந்தரமும்,போல்டன்புரம் பகுதியைச் சேர்ந்த செம்புவும், அவர்களது கிரா மத்தின் முதல் பொறியியல் மாணவர் கள் மட்டுமல்ல, முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களும்கூட. இரு வரும் நன்கு படிக்கக்கூடியவர்கள்.  சோமு அரசியல் ஆழமும், ஸ்தாபன கட்டமைப்பும் கொண்ட மாணவர் தலைவராக உருவெடுக்கிறார். இரண்டாம் ஆண்டிலேயே எஸ்.எப்.ஐ கிளைச் செயலாளராக தேர்வு செய்யப் பட்டு பல மாணவர்களை சங்கத்தில் சேர்க்கிறார். அந்தவகையில் தான் செம்புவும் எஸ்.எப்.ஐ உறுப்பின ராகிறார்.

கல்லூரியில் மாணவர் சங்கச் செயல்பாடுகளில் முக்கியமானதாக முதலாமாண்டு மாணவர்களை ராக்கிங் செய்வதை தடுப்பது. மாண வர்களை சாதியாக பாகுபடுத்து வதற்கு எதிராக அனைத்து தரப்பு மாணவர்களையும் அமைப்பாக்குவது. கல்லூரிக்குள் அடிப்படைவசதியை மேம்படுத்துதல், தேர்வு கட்டணம், கல்வி கட்டணம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்காக மாணவர்களை அணிதிரட்டி போராட்டம் நடத்து உள்ளிட்ட பணிகளை தொடர்ச்சியாக செய்து வருகிறார்கள்.  குறிப்பாக கல்லூரி விடுதியிலும் முறையான உணவு வழங்கச் செய்வது, உணவுக் கட்டணம், விடுதிக் கட்டணம் ஆகியவற்றை குறைப்ப தற்கான போராட்டத்தையும் நடத்துகி றார்கள். மாணவர்களை கோரிக்கை களுக்காக திரட்டுவது மட்டுமல்லாமல் அவர்களை அரசியல்படுத்தி அமைப்பாக்கும் பணியையும் செய்து வருகிறார்கள்.

இத்தகைய சூழலில் கல்லூரியில் நடைபெறும் மாணவர் பேரவையை கைப்பற்றத் திட்டமிடுகிறார்கள். அக்கல்லூரியில் ஏற்கனவே அமைப்பு இருந்தாலும் பேரவை தேர்தலை பொறுத்தவரை திமுக அல்லது காங்கிரஸ் மாணவர் அணிகளே அனைத்துப் பொறுப்புகளையும் கைப்பற்றி வந்தன. இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் தேர்தலில் போட்டி யிட்டாலும் சாதிய அணி சேர்க்கையை எதிர்த்து ஓரிரு இடங்களை தவிர முக்கியமான பொறுப்புகளில் வெற்றி பெற முடியாத சூழல் நிலவிவந்தது.  இந்நிலையில் எஸ்எப்ஐ தோழர்கள், அனைத்துத் தரப்பு மாணவர்களையும் ஒன்றிணைக்க “அன்புக் குழு” என்ற ஒரு குழுவை உருவாக்கி மாணவர்களிடம் ஒற்று மையை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். முதலாமாண்டு மாணவர்களை ராக்கிங்கிலிருந்து பாதுகாக்கிறார்கள். மேலும் அவர்களை சாதியாகப் பிரியாதவகையில் நட்புணர்வை வளர்த்து அன்பு கேங்கில் இணைக்கி றார்கள். இத்தகைய நடவடிக்கையால் சில மாதங்களிலேயே மாணவர்கள் மத்தியில் ஒற்றுமை நிலவுகிறது. கல் லூரியில் நடைபெற்ற போராட்டங்க ளால் மேலும் ஒற்றுமை பெறுகி றார்கள். 

இந்நிலையில், 1980-81 ஆண்டிற் கான மாணவர் பேரவைத் தேர்தல் கல்லூரியில் அறிவிக்கப்படுகிறது. பொதுச்செயலாளர் பொறுப்பிற்கு செம்புலிங்கம் எஸ்.எப்.ஐ சார்பில் போட்டியிடுகிறார். அன்புக் குழுவின் ஒற்றுமை முயற்சி யும் சேர்ந்து அவரை தேர்தலில் வெற்றி பெற வைக்கிறது. தோழர் ரவீந்திரன் பேரவை தலைவராக தேர்ந்தெடுக்கப் படுகிறார். மேலும் அனைத்து பதவி களுக்கும் இந்திய மாணவர் சங்கத்தை சார்ந்த தோழர்களே தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். தோற்ற அணியினர் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி வெறுப்பின் உச்சத்திற்கு சென்று பல்வேறு தகராறுகளை, தாக்குதல்களை தொடுக்கிறார்கள். இருப்பினும் பெரிதாக ஒன்றும் செய்ய இயலவில்லை.  அதனால் கல்லூரிக்கு வெளியே இருந்து 50க்கும் மேற்பட்ட குண்டர்களையும், ரெளடிகளையும் கொண்டு தாக்கத் திட்டமிடுகிறார்கள். 

சம்பவத்தன்று மாணவர் பேரவை யின் பொதுச்செயலாளர் செம்புலிங்கம் விடுதியிலிருக்கும் போது சமாதான பேச்சுவார்த்தையென விடுதிக்கு வெளியே அழைக்கப்படுகிறார். பேசிக் கொண்டிருக்கும்போதே அக்கும்பலி லிருந்து ஒருவன் செம்புலிங்கத்தின் கண்ணில் மண்ணை அடிக்க சம்பவம் அரங்கேறுகிறது. செம்பு பலசாலி திருப்பி தாக்கும் திறனுடையவர் என்ப தால் பேச்சுவார்த்தை என அழைத்து வஞ்சகமான முறையில் அவரை படுகொலை செய்கிறார்கள். சோமு ஜூனியர் மாணவர் ஒருவ ரோடு விடுதி அருகே வரும்போது அதே கும்பல் இவரையும் மடக்கி சுற்றி வளைத்து தாக்குகிறது. அருகிலிருந்த ஜூனியர் மாணவரை சோமு தள்ளி விட்டு தப்பிக்க செய்கிறார். அம்மாண வர் தப்பி சென்று சக மாணவர்களை அழைத்து வருவதற்குள் எல்லாம் முடிந்து விடுகிறது. 21 வயதே ஆன அந்த இரண்டு இளைஞர்களும் மரணிக்கிறார்கள்.

கல்விக்கான போராட்டத்தில் புடம் போட்ட தங்கமாக மிளிறும் சோமு -  செம்புவின் வரலாறு என்றென்றைக் கும் மறையாது. அன்றிலிருந்து 2006 வரை தமிழகத்தின் அனைத்து கல்லூரி களிலும் மாணவர் பேரவையை பெரும் பாலும் எஸ்எப்ஐ கைப்பற்றி வந்தது. தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிரான போராட்டம், கல்வி கட்டண நிர்ணயம், கேலிவதை தடுப்பு, பாலியல் வன்முறைக்கு எதிராக, தனியார் சட்டக்கல்லூரி திறப்பதற்கு எதிராக, ஐடிஐ, பாலிடெக்னிக், பள்ளி கல்லூரிகளில் நன்கொடை தடுப்பு, அரசு பள்ளி கல்லூரி பாதுகாப்பு, சமச்சீர் கல்விக்காக, நீட், தேசியக் கல்வி கொள்கை எதிர்ப்பு போராட்டம் என மாணவர் இயக்கத்தின் அனைத்து போராட்டங் களிலும் சோமுவும் செம்புவும் வாழ்ந்து வருகிறார்கள். மாவீரன் பகத்சிங்கின் வாரிசுகளாக எல்லோருக்கும் கல்வியும், எல்லோ ருக்கும் வேலையும் கிடைப்பதற்கான அவர்தம் போராட்டங்களையும், இலட்சியங்களையும், கொள்கை களையும் ஒருபோதும் கொல்ல முடியாது.

க.நிருபன் சக்கரவர்த்தி