சென்னை,ஆக.9- நீலகிரியில் மழை வெள்ள இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அறி வித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அரசு வெளி யிட்டுள்ள அறிக்கையில், நீலகிரி மாவட்டத்தில் கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் உடனடி மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபட மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளது. மீட்புப் பணி களில் மாநில, தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி கள் துறை, ராணுவம் உள்ளிட்ட துறைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை மற்றும் நிலச்சரி வால் பாதிக்கப்பட்ட 1704 பேர் 28 பேரிடர் மீட்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவம், ஜெனரேட்டர் வசதி கள், வேட்டி, சேலை வழங்கப்ப டும். காட்டுக்குப்பையில் கனமழை யில் சிக்கியிருந்த 36 மின் பணி யாளர்கள், மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரி வித்துள்ள அவர், அவலாஞ்சி யில் சிக்கியுள்ள 40 பேருக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுகப்பட்டுள்ளது. வெள்ளம், இடிபாடுகளில் சிக்கி நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சென்னன், விமலா, சுசீலா, பாவனா, அமுதா ஆகிய 5 பேர் உயிரிழந்ததாகக் கூறியுள்ள அவர், உயிரிழந்தவர்கள் குடும் பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.