சென்னை,மார்ச் 17- மக்கள் அதிக அளவில் ரயில் நிலையத்திற்கு வரு வதை தவிர்க்கும் வகை யில் நடைமேடை கட்டணம் 50 ரூபாயாக உயர்த்தப்படுவ தாக தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை அதி கரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதி ப்பை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மக்கள் அதிக அளவில் ரயில் நிலையத்திற்கு வரு வதை தவிர்க்கும் வகை யில் நடைமேடை கட்டணம் 50 ரூபாயாக உயர்த்தப்படுவ தாக தென்னக ரயில்வே செவ்வாயன்று அறி வித்துள்ளது. கட்டண உயர்வு புதனன்று முதல் அம லுக்கு வருகிறது. இது மார்ச் 31 ஆம் தேதி வரை நடை முறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.