what-they-told

img

பூத்துக்குலுங்கும் ‘குயின் ஆப் சைனா’ மலர்கள்

நீலகிரி, டிச.26- உதகை தாவரவியல் பூங்காவில்  குயின் ஆப் சைனா மலர்கள் பூத்துள்ள தால், இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். சீனாவின் அரசி என பவுலோனியா பார்சினி என்ற வகை மலர்கள் அழைக் கப்படுகிறது. இவை மரங்களில் பூக்கக் கூடியவை. இவை சீன நாட்டியல் அதி களவு உள்ளன. இந்த மரங்கள் அங்கு பல்வேறு சாதனங்கள் செய்வதற்காக வளர்க்கப்படுகிறது. குளிர் காலத்தில் (டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை) இந்த மரம் முழுவதும் மலர்கள் பூத்துக்குலுங்கும். பார்ப்பதற்கு மரமே வெள்ளை நிறம் கலந்த இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும், இத்தகைய மலர்களை சீன மக்கள் குயின் ஆப் சைனா என்று அழைக்கின்றனர். இவ் வகை மரங்கள் இந்தியாவில் அரிதா கவே காணப்படுகிறது. உதகை அரசு  தாவரவியல் பூங்காவில் ஒரே ஒரு மரம் மட்டுமே உள்ளது. கடந்த பல ஆண்டு களுக்கு முன் சீனாவில் இருந்து இம்மரம்  கொண்டு வரப்பட்டு தாவரவியல் பூங் காவில் வைக்கப்பட்டுள்ளது. இந்த மரத் தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் மலர்கள் பூத்துக்குலுங்கும். இம்முறை கடந்த வாரம் வரை மழை பெய்த நிலை யில், பனிப்பொழிவு குறைந்து காணப் பட்டது. இதனால் மரங்களில் மலர்கள் பூக்காமல் இருந்தது. மரம் முழுவதும் மொட்டுக்களே காணப்பட்டது. தற்போது மழை குறைந்து கடந்த ஒரு வாரமாக பனி கொட்ட துவங்கியுள்ளது. இதனால், இம் மரத்தில் ஒரு சில கிளைகளில் மட்டும் பூக்கள் பூக்க துவங்கியுள்ளன. எனினும், அரிதாக காணப்படும் இந்த மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல் கின்றனர்.