அம்பத்தூர், டிச. 30 - ஆவடி அராபத் ஏரியில் கோழி கழிவு களை குவியல் குவியலாக கொட்டி செல்லும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆவடி திருமுல்லைவாயில் பகுதி யில் அராபத் ஏரி உள்ளது. இந்த ஏரி சுமார் 400 ஏக்கர் பரப்பளவு கொண்டது. தற்போது ஆக்கிரமிப்புக ளால் ஏரி சுருங்கி வருகிறது. அண்மை யில் பெய்த வடகிழக்கு பருவ மழையால் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்த ஏரியில் சிலர் தினசரி குப்பை உள்ளிட்ட கழிவுகளை ஏரியில் கொட்டுகின்றனர். இதனால் சுற்றுப் புறங்களில் நிலத்தடி நீர் பாதிக்கப்படு கிறது. இந்நிலையில் சிலர் செத்த கோழி களை மூட்டை மூட்டையாக ஏரியில் போட்டுச் சென்றுள்ளனர். ஆவடி மாநகராட்சி நிர்வாகமும், பொதுப் பணித் துறையும் உடனடியாக தலை யிட்டு கோழிகளை அப்புறப்படுத்தி, குப்பைக் கழிவுகளை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும், புழல் அராபாத் ஏரி பாதுகாப்பு இயக்கத் தினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், ஏரியை தூர்வாரி குடிநீர் தேக்க ஏரியாக மாற்றவும் வலியுறுத்தி யுள்ளனர்.