what-they-told

img

காட்டு யானை சாணத்தில் பிளாஸ்டிக் பொருட்கள்

வன ஆர்வலர்கள் அதிர்ச்சி கோவை, ஜன.10- மருதமலை பகுதியில் யானை சாணத் தில் பிளாஸ்டிக் பொருட்கள் கண்டெ டுக்கப்பட்டது வன ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது. கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில்  ஏராளமான வன விலங்குகள் உள்ளது. குறிப்பாக யானை களின் வாழ்விடமாக இப்பகுதி உள்ளது. உணவு மற்றும் தண்ணீர் தேடிச் செல்லும் யானைகள் அடிக்கடி வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்து செல்வது வாடிக்கை. உணவுக்காக வனத்தைவிட்டு வெளியே வரும் யானை கள், குப்பை மேடுகளில் கொட்டப்படும் காய்கறிக் கழிவுகளை உட்கொள்கின்றன. அப்போது, பிளாஸ்டிக் பைகளையும் சேர்த்து உட்கொள்வதால் யானைக ளுக்கு உடல்நலம் பாதிக்கப்படுவதோடு உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் இருந்து வருகிறது.  இந்நிலையில், மருதமலை மலைக் கோயிலுக்கு செல்லும் பாதையில் கிடந்த யானை சாணத்தை வன உயிரின ஆர் வலர்கள் ஆய்வு செய்தபோது அதில், பிளாஸ்டிக் கவர்கள், முகக்கவசம், நாப் கின் ஆகியவை இருந்தது தெரியவந் தது. இதுகுறித்து வன உயிரின ஆர்வலர் முருகானந்தம் என்பவர் கூறுகையில், மருதமலைக்கு அருகிலுள்ள சோமயம் பாளையம் கிராமத்தில் பலரின் எதிர்ப்பை மீறி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குப்பை  கிடங்கு அமைக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறை தரப்பிலிருந்தும் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இப் பகுதியில் இருந்து குப்பை கிடங்கை அகற்ற முடியவில்லை. இதற்கிடையே, வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் யானை கூட்டம் குப்பை மேடு உள்ள பகுதிக்கு அவ்வப்போது வருகின்றன. இங்கு யானைகள் வரும்போது அவற்றை கண் காணித்து அங்கிருந்து விரட்டி வருகி றோம். தொடர்ச்சியாக யானைகள் பிளாஸ் டிக்கை உட்கொள்ளும் போது அவை உயி ரிழக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதனை துறை சார்ந்த அதிகாரிகள் கவ னத்தில் கொண்டு யானைகள் பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொள்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என் றார். சமீபகாலமாக காட்டு யானைகள் எவ் வித காரணமும் இன்றி அடிக்கடி உயிரி ழந்து வரும் நிலையில் தற்போது காட்டு  யானையின் சாணத்தில் பிளாஸ்டிக் குப்பைகள் இருப்பது வன ஆர்வலர்கள்  மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது.

;