what-they-told

img

திருப்பத்தூர், ராணிப்பேட்டை புதிய மாவட்டங்கள் உதயம்

வேலூர், நவ. 28- வேலூர் மாவட்டத்திலிருந்து 35ஆவது புதிய மாவட்டமாக திருப்பத்தூரையும், 36ஆவது புதிய மாவட்டமாக ராணிப் பேட்டையையும் முதல்வர் எடப் பாடி பழனிசாமி துவக்கிவைத்தார். திருப்பத்தூர் மாவட்ட தொடக்க விழாவில் ரூ.94.37  கோடி மதிப்பில் 7,977 பயனாளி களுக்கும், ராணிப்பேட்டை மாவட்ட தொடக்க விழாவில் 8,688  பயனாளிகளுக்கு 89 கோடியே 73 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார். மேலும் திருப்பத் தூர் மாவட்டத்திற்கு ரூ.296 கோடி மதிப்பீட்டிலும், ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு 297 கோடி மதிப்பீட் டிலும் மொத்தம் 593 கோடி மதிப் பீட்டிலான புதிய திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார் பின்னர் முதலமைச்சர் பேசுகையில், கடந்த 2018ஆம் ஆண்டு வார்டுகள் புதிய மறுவரை யறை செய்யப்பட்டது. அதனடிப் படையில்தான் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும். எனவே புதிய மாவட்டங்கள்  பிரிப்பதற்கும் உள்ளாட்சித்தேர்தலுக்கும் சம்பந்தம் இல்லை என்றார்.

விழாவில் துணை முத லமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழி லாளர் நலத்துறை அமைச்சர் நிலோ பர் கபில், சட்டமன்ற உறுப்பி னர்கள் சு.ரவி, சம்பத், வேலூர் மாவட்ட ஆட்சியர் அ.சண்முக சுந்தரம், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ம.ப.சிவனருள், ராணிப் பேட்டை மாவட்ட ஆட்சியர் எஸ். திவ்யதர்ஷினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மாலதி, ஊராட்சிகள் உதவி இயக் குனர் ஏ.எஸ்.குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செ.வெங் கடாசலம், கு.முத்துச்செல்வி, மண்டல நகராட்சி நிர்வாகங் களின் இயக்குனர் செ.விஜய குமார், நகராட்சி ஆணையாளர் பொறுப்பு எஸ்.ராஜரத்தினம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.