what-they-told

img

பராமரிப்பு பணி: ரயில் சேவை ரத்து

சேலம், பிப்.22- சேலம் மேக்னசைட் பகுதி யில் நடைபெற்று வரும் பரா மரிப்பு பணி காரணமாக ஈரோடு - மேட்டூர் அணை ரயில் 4 நாட்கள் ரத்து செய்யப்படுகிறது. மேலும், சேலம் - யஷ் வந்த்பூர் ரயில், ஓமலூரிலிருந்து இயக்கப்பட உள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது. சேலம் ஜங்சன் ரயில் நிலையத்தை அடுத்துள்ள மேக் னசைட் ரயில் நிலையம் பகுதியில் பராமரிப்பு பணி நடை பெற்று வருகிறது. இதையொட்டி இவ்வழியாக செல்லும் ரயில் களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஈரோடு - மேட்டூர் அணை ரயில் (வண்டி எண்:06407) பிப்.23 ஆம் தேதி (இன்று) முதல் பிப்.26 ஆம் தேதி வரை 4 நாட் கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் மறு மார்க்கத்தில் மேட்டூர் அணை - ஈரோடு ரயில் (வண்டி எண்:06408) பிப்.23 ஆம் தேதி முதல் பிப்.26 ஆம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. மேலும், சேலம் - யஷ்வந்த்பூர் ரயில் (வண்டி எண்-16212) பிப்.23 ஆம் தேதி முதல் பிப்.26 ஆம் தேதி வரை சேலம் ஜங்சன் ரயில் நிலை யத்திலிருந்து காலை 5.20 மணிக்கு புறப்படுவதற்கு பதி லாக, ஓமலூர் ரயில் நிலையத்திலிருந்து காலை 5.40 மணிக்கு  புறப்பட்டு யஷ்வந்பூர் செல்லும். இந்த ரயில் சேவை சேலம் -  ஓமலூர் இடையே இல்லை. மேலும், ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி  எண்:13352) இயக்கத்தில் 45 நிமிடம் கால தாமதமாகவும், சேலம் - அரக்கோணம் ரயில் (வண்டி எண்:16088) பிப்.25 ஆம்  தேதி ரயில் இயக்கத்தில் 30 நிமிடமும் காலதாமதம் ஏற்படும் என சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.